புதன், 7 செப்டம்பர், 2011

சீ சீman அட எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டே



ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது! உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...! சீமான் ஆவேசம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து 6.9.2011 (செவ்வாய் கிழமை) காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது அறிக்கையில் அறிவித்திருந்தார்.
அதன்படி நடைப்பயணம் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினருடன் சீமான் கைது செய்யப்பட்டார். பின்னர் மாலை 6.30 மணி அளவில்  அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். திருமண மண்பத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் ஆர்க்காட்டில் நடக்கும் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீமான் பேசுகையில்,
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் இவர்களின் விடுதலையே தமிழினத்தின் விடுதலை. அதற்காகத்தான் போராடுகிறோம். இவர்கள் விடுதலை அடைந்தால் ஈழத் தமிழினமே விடுதலை அடைந்ததாக அர்த்தம். இவர்களுக்கான போராட்டத்தில் நாம் எப்போதும் உள்ளோம்.

கடந்த ஆட்சிகளில் ஒன்றரை ஆண்டுகளில் ஐந்து முறை என்னை கைது செய்தார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். ஆகையால் கைதுக்கு பயப்படாமல் கைதானேன். போலீசார் அழைத்துச் சென்ற இடத்திற்கெல்லாம் சென்றேன். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன். கருணாநிதியைப் போல கைதுக்கு பயந்து நான் ஒருமுறைக் கூட கத்தியதில்லை. நடித்ததில்லை. இப்போதும் கூட என்னை கைது செய்தார்கள். நான் கைதானேன். நடைப் பயணத்தை நிறுத்துங்கள் என்றார்கள். சட்டத்தை மதிப்பவன் நான். அதனால் தான் காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டத்தை கைவிட்டோம்.
ஆனால் லட்சியத்தையோ, நோக்கத்தையோ கைவிடவில்லை. ஈழத்தில் சுதுமனத்தில் தலைவர் பிரபாகரன் ஒரு பிரகடனம் செய்தார். நம் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் நமது இந்தியா, நம் நலனை காக்கும் இந்தியா நம்மை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்கிறது. நாம் அவர்களிடம் ஆயுதங்களை மட்டுமே ஒப்படைக்கிறோம். லட்சியத்தை ஒருபோதும் கைவிடவில்லை.
அதைப்போலத் தான் இன்று போராட்டத்தை கைவிட்டுள்ளோம். அதற்கு மற்றொரு காரணம் நமது முதலமைச்சர் அம்மா, நமது தம்பிமார்கள் 3 பேரை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கைத்தான். அவர்களை நாம் நம்புவோம். அவர் சட்டமன்றத்தில் மூன்று பேரை காக்க தீர்மானம் கொண்டு வரும் முன்பு எத்தனை அழுத்தம், எதிர்ப்புகளை சந்தித்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
மற்றவர்கள் பேசியதை விட அம்மா செய்து காட்டினார். இவர்களை காப்பாற்ற ரயில் மறியல், ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தோம். நம்மை அவர் கைது செய்யவில்லை. நசுக்க முற்படவில்லை. நம்மை அழிக்க முற்படவில்லை. நம்மை மதித்தார்.
இதையெல்லாம் மத்திய அரசு, தமிழக அரசை அம்மாவின் பெயரை கெடுக்க வேண்டும் என முடிவு செய்தது. ராஜபக்சே மீது போர்க்குற்றம சுமத்தி பொருளாதார தடை விதிக்க வேண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மத்திய அரசு விரும்பவில்லை.

அம்மாவுக்கு உலக தமிழர் மத்தியில் அம்மாவுக்கு ஏற்பட்ட நற்பெயரை கெடுக்க, புகழை கெடுக்க மத்திய காங்கிரஸ் அரசு இந்த மூன்று பேரை தூக்கிலிட்டு முதல் அமைச்சர் அம்மாவை புகழை கெடுக்க முடிவு செய்தது. உடனே இதை தடுக்க கருணாநிதி ஆலோசனை சொல்கிறார். இவர் என்ன அம்மாவுக்கு அரசியல் ஆலோசகரா. 6 மாதத்திற்கு முன்பு நீ தானே ஆட்சி புரிந்தீர். காப்பாற்ற வேண்டியதுதானே, காப்பாற்றும் எண்ணம் உனக்கு இல்லை. இப்ப நீ ஏன் துள்ளுரன்னு எங்களுக்கு தெரியும்.
இந்த அரசு தமிழனுக்காக ஆளும் அரசாக உள்ளது. வரும் உள்ளாசித் தேர்தலில், அதற்கு அடுத்து வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ்காரர்களையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருபவர்களையும் ஒரு இடத்தில் கூட ஜெயக்க விடமாட்டேன்.
ஒருத்தன் டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டு தீர்மானம் எங்களை கட்டுப்படுத்தாது என்கிறான். அப்படி என்றால் உன் முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்றுவிடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உண்வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்ந்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது.

 இந்தியாவை ஆளப்போவதை யார் என்பதை எங்கள் முதல் அமைச்சர் அம்மா தான் தீர்மானிக்கப்போகிறார். அம்மாவே நீங்கள் கவலைப்படாதீர்கள். தென்னிந்தியா முழுவதும் சுற்றி வெற்றிக் கனியை பறித்து வந்து உங்கள் காலடியில் நான், என் தம்பி மார்களும் சமர்ப்பிக்கிறோம்.
இந்த மூவரின் விடுதலை அம்மா கையில் தான் உள்ளது. நமது அன்னை அற்புதம்மாளின் கண்ணீரை முதல்வர் அம்மாதான் துடைக்க வேண்டும் என்று பேசினேன். அவர் ஒரு கண்ணீரில் விழுந்த நீரை துடைத்துவிட்டார். இன்னொரு கண்ணின் நீரையும் அம்மா துடைப்பார் என நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள்.
இவவாறு சீமான் பேசினார்.

அம்மாவின் காலடியில்.....ஜெயலக்ஷ்மி விவகாரம் உறுதியாகத்தான் இருக்கிறது..எனவே அம்மாவின் காலடியை விட்டு விட்டால் அடுத்த நிமிடம் கம்பி எண்ண வேண்டி இருக்கும்...பாவம் சீமான்...

சீமான் அவர்களே தமிழர்களுக்காக ஜெயலலிதா ஒன்றும் செய்யவில்லை நீ மு க அவர்களை பற்றி உனக்குபேச அருகதை இல்லை ஜெயா அவர்களின் ஜால்ரா அடித்து உன் பொழைப்பை பார்த்துகொள் சினிமாவில் உன் பருப்பு வேகவில்லை பல தமிழ் சகோதர்களை எமாற்றி கொண்டு இருக்கிறாய் தமிழனை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை

பொழைக்க தெரிஞ்ச மனிசண்டா நீ அம்மா மீது பயமா பக்தியா ?,ரொம்ப சொம்பு அடிக்காதே,நாறுது .

ஜிங் ஜிங் ஜிங் ஜான் . அம்மாவின் எடுபடி.

எங்கே ஈ வி கே எஸ் எங்கே யுவராஜா அறிக்கைகள்

சீமான் எப்ப ஜெயாவின் கொள்கைபரப்பு செயலாளர் ஆனார் ? அதுக்காக கலைஞரை இப்படி தரக் குறைவாக பேசலாமா ? அவர் வயதுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவன் நீ எல்லாம் ஒரு தலைவன் காலம் பதில் சொல்லும் சீமா

அட நாதாரி ......... எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டே

சீமானுக்கு மண்டை கொஞ்சம் குழம்பி உள்ளது தயவு செய்து ஏதாவது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்த்தால் தெளிவு பிறக்கும். நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்டு அதிமுக விற்கு அன்டர் கிரவுண்ட் வேலை செய்வது எங்களையெல்லாம் கேனயன் ஆக்கும் வேலை சீமானே நீ இப்படி அம்மாவுக்கு அடிபணிவாய் என்று தெரிந்திருந்தால் உன் தமிழ் நாம் தமிழர் ஆகியிருக்க முடியாது .ஆடு வளர்த்தவனை நம்பாமல் அருப்பனை நம்புமாம் இந்த கதை ஆகிவிட்டது உன் கதை.அம்மாவின் பாட்டை விட்டுவிட்டு தமிழனுக்காக போராடு இல்லையேல் உன் கொள்கை அறுக்கப்படும் வேரோடு.

தம்பி சீமான் சின்ன பயலே உங்க அம்மா தானடா விடுதலை புலிகலஎல்லாம் தூக்கில போடணும் சொன்னது இப்ப என்ன ஆச்சு டா உங்க அரசியல் எல்லாம் போய் உன் ஜெயா[ஜெய லெட்சுமி ] வச்சுக்கோ இங்கே யாரையும் ஏமாத்த முடியாது கருணா நிதி தோற்தது உன்னோட பேச்சால் அல்ல குடும்ம்பம் அரசியல் மற்றும் மின்சாரம நீ ஜெயா காசு வாங்கிட்டு பேசுவ அதை எல்லாம் நம்பறதுக்கு உன் பின்னாடி சுத்துவன்களே நாலு பேரு அந்த மஞ்ச மாக்கேன்கே

கருத்துகள் இல்லை: