வெள்ளி, 9 செப்டம்பர், 2011

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!











பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!
லக வரலாற்றில் இடம் பெற்றுள்ள அதிகார வர்க்க காமெடி பீஸ்கள் அனைவரும் இரண்டு முறை ‘பல்பு’ வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள். முதல் முறை இந்த ‘கைப்புள்ளை’களின் வருகை சோகக் கதையாகவும், மறுமுறை கேலிக் கூத்தாகவும் அமைகிறது என்பது விதி.
இதற்கு சமீபத்திய உதாரணம், சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ் என்றழைக்கப்படும் ‘வண்டு முருகனி’ன் கதை.
‘இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும், ‘நானும் ரவுடிதான்’ கணக்காக எப்படியாவது ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு போராளியாக ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ். அதனால்தான் வரும் செப்டம்பர் 20-ம் தேதி இரண்டாம் கட்ட யாத்திரையைத் தொடங்கப் போவதாக செய்தியாளர் கூட்டத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

.......பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். கையோடு இந்தக் கைப்புள்ளையின் சீடரான சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சான்றிதழ் கொடுத்து இந்தச் சீடர் பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாராம்.

சுருக்கமாக சொல்வதென்றால் எந்தக் கறுப்புப் பணத்தை மீட்கப் போவதாக கடப்பாறையின் நுனியில் அமர்ந்தபடி பிரும்ம முகூர்த்தத்தில் தவம் செய்வதாக இந்தக் கைப்புள்ள பிலீம் காட்டுகிறதோ, அந்தக் கறுப்புப் பண பதுக்கலில் – கையாடலில் – பரிமாற்றத்தில் – மோசடியில் – அவரே ஈடுபடுவதாக அமலாக்கப் பிரிவு ‘கண்டுபிடித்து’ அது தொடர்பான விசாரணைக்கும் வெற்றிலை தாம்பூலத்துடன் அழைத்திருந்தது. இதைக் குறித்து கேள்வி கேட்கத்தான் செய்தியாளர்கள் சென்றனர். அப்போதுதான் ‘இரண்டாம் கட்ட ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு யாத்திரை’யை தொடங்கப் போவதாக கிச்சுகிச்சு மூட்டினார்.
Read More

கருத்துகள் இல்லை: