வெள்ளி, 9 செப்டம்பர், 2011

சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாது

சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு
mano-ganesan1ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும். இத்தகைய கருத்தை சம்பிக்க ரணவக்க உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத் தலைவர்கள், எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினார்களோ, அந்த நாடுகளுடனையே பேசி தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுகளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இழுக்கக்கூடாது. அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கக்கூடாது என ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவிற்கு பதிலளித்துள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்பதுவே சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை கருத்தாக அமைகின்றது. முதலில் இத்தகைய ஒரு ஆபத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போவது யார் என்பதை சம்பிக்க ரணவக்க பகிரங்கப்படுத்தவேண்டும். (மேலும்

கருத்துகள் இல்லை: