சனி, 10 செப்டம்பர், 2011

அழகிரி புறக்கணிப்பு : திமுகவில் சலசலப்பு


 

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தொடர்ந்து பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றதால் டெல்லியிலேயே
முகாமிட்டிருந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழகம் சிறையில் இருக்கும் திமுகவினரை சந்தித்துவிட்டு உடனே டெல்லி சென்றூவிட்டார்.இன்று டெல்லியில் இருந்து மதுரை திரும்பியுள்ளார் அழகிரி.

இந்நிலையில் மாநில திமுக வழக்கறிஞர்கள் கூட்டம் கலைஞர் தலைமையில் காலை 10 மணிக்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அவர் பங்கேற்காத நிலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பியிருந்தாலும் அழகிரி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார் அழகிரி புறக்கணித்ததை அடுத்து மதுரை உட்பட தென்மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தை தென் மாவட்ட வழக்கறிஞர்களுடன், மாவட்ட செயலாளர்களும் சென்னை வருவதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட செயலாளர்கள் புறக்கணிப்பை அடுத்து வழக்கறிஞர்கள் மட்டும் தனி பேருந்தில் சென்னை வந்தனர்.
அழகிரியின் புறக்கணிப்பு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: