வியாழன், 8 செப்டம்பர், 2011

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !


இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.
இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.
ஊழல் வழக்குளில் பிரதமர் உள்ளிட்ட பெரும் தலைகளெல்லாம் சிக்கியுள்ள நிலையில் முதல் ஆசுவாசமாக அண்ணா ஹசாரே இருந்தார், இரண்டாவதாக இந்த குண்டு வெடிப்பு! 11 பேர் உயிரிழந்ததை விட இதுதான் பெரிய இழப்பு!!


கருத்துகள் இல்லை: