வியாழன், 8 செப்டம்பர், 2011

முன்னணி நடிகைகளை???? வருமான வரி அதிகாரி Andasu Ravinda

ரவீந்தருக்கு தமிழ்மொழி பழக்கமாவதற்கு முன்பே தமிழ் நடிகைகளின் கணக்கு வழக்குகள் அறிமுகமாயின

தமிழகத்தின் குக்கிராமத்தில் தமிழக வருவாய்த்துறையில் கடைநிலை ஊழியராக இருப்பவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரைப் பாய்ந்து சென்று பிடித்து தினசரி பத்திரிகைகளில் செய்தியாக்கிவிடுவார்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார். அதற்கு நேர் மாறாக மத்திய வருமான வரித்துறையில் கூடுதல் கமிஷனராக இருந்த ரவீந்தர் என்கிற ஐ.ஆர்.எஸ். அதிகாரி கடந்த பதினோரு வருடங்களாக தினமும் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கி தனது அலுவலக அறையையே மண்டி வியாபார அறையாக மாற்றி ஆட்டம் போட்டுக்கொண்டி ருந்தார். அவரைப் பொறி வைத்து பிடிக்க பல மாதங்களாக சி.பி.ஐ. காத்துக்கொண்டிருந்தது. 2005-ஆம் ஆண்டு சென்னையில் அதிகாரியாக பதவியேற்ற ரவீந்தருக்கு தமிழ்மொழி பழக்கமாவதற்கு முன்பே தமிழ் நடிகைகளின் கணக்கு வழக்குகள் அறிமுகமாயின. அவர்கள் வரிஏய்ப்பு செய்த பணத்தில் ஒரு கோடி வரி ஏய்ப்பு என்றால் பத்து லட்சம் கமிஷன் என கணக்கில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய காசு கொடுத்தார்கள். கூடவே இலவச இணைப்பாக தங்களையும் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் கமிஷனையும் இலவச இணைப்பையும் பெற்றுவந்த ரவீந்தர், கமிஷன் தொகையில் ஈ.சி.ஆர். சாலையில இலவச இணைப்புகளை தினமும் பெற ஒரு பண்ணை வீட்டையே விலைக்கு வாங்கினார். 2007-ஆம் ஆண்டு ஸ்னேகமான நடிகை யின் கணக்கை ஆராய்ந்த ரவீந்தரை "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ' என அவருக்கு தன்னையே இலவச இணைப்பாக ரவீந்தரின் பண்ணை வீட்டில் வைத்துப் பரிமாறினார். எதேச்சையாக பண்ணை வீடுகளை வீடியோ கேமராவோடு சோதனை செய்த நீலாங்கரை ஏ.சி.யிடம் ரவீந்தர் நடிகையுடன் சிக்கியதுதான் இவரது லீலைகளை பற்றிய முதல் பதிவு என்கிறார்கள் சி.பி.ஐ. போலீஸார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ரவீந்தர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை நிரந்தரமாக செட்-அப் செய்துகொண்டார். அந்த வீட்டின் முன்பு ரவீந்திரனின் சொந்த உபயோகத்திற்கு மத்திய அரசு அளித்த அவரது பதவியின் பெயர் பொறித்த நான்கு சிவப்பு சுழல் விளக்கு கார்கள் எப்போதும் நின்றுகொண்டிருக்கும். இதுதவிர மேலும் 2 கார்களை தனது அலு வலக உபயோகத்திற்கு பயன் படுத்துவார். இந்த 6 கார்களுக்கும் தனித் தனி டிரைவர்கள் உண்டு. இந்த டிரைவர்களை வித்தியாச மான வேலைகளை செய்யச் சொல்வார் ரவீந்தர். அந்த வித்தி யாசமான வேலைகள் எங்களுக் குப் பெரிய தலைவலியாக மாறி யது என சொல்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.தன்னிடம் கணக்கு சமர்ப்பிக்க வரும் கம்பெனிகள், நடி கர், நடிகைகள் மற்றும் தனிப் பட்ட நபர்களை தனது வழிக்குக் கொண்டுவர, ஒரு செட் வருமான வரித்துறை ஊழியர்களை தனது காரில் அனுப்பி வைப்பார். அவர்கள் போய் ரெய்டு போன்ற நாடகத்தை கணக்கு சமர்ப்பித்த நபர்களின் வீடு, அலுவலகத்தில் அரங்கேற்றுவார்கள். "எதுக்குப் பிரச்சினை, ரவீந்தர் சாரை போய் பாருங்க, எல்லாம் நல்லபடியா முடியும்' என தங்கள் பங்குக்கு கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். இப்படிப் போலியான ரெய்டுகளை பழைய சிம்ரன் தொடங்கி லேட்டஸ்ட் அனுஷ்கா வரை ரவீந்தர் நடத்தியுள்ளார். ஒருமுறை இதுபோன்ற ரெய்டை ஒரு பெரிய நடிகர் வீட்டில் நடத்த முயல... அவர் மத்திய நிதி அமைச்சரிடமே போன் போட்டு ரவீந்தரைப் பற்றி புகார் செய்தார் என விவரிக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். வருமானவரி மோசடி என்பது ஒரு கணக்கு வழக்கு விவகாரம். அதில் தவறு என்றால் அபராதம் கட்டினாலே போதும். சிறைத்தண்டனை எல்லாம் கிடையாது. ஆனால் வரி கட்டாத கறுப்புப் பணத்தை அரசுக்கு வரியாக அழவேண்டுமே என்பதால் அதிலிருந்து தப்பிக்க பிரபலங்கள் ரவீந்தரின் லஞ்ச கணக்கு வழக்குக்கு ஒத்துவந்தார்கள். தன்னிடம் சிக்கியவர்களிடமெல்லாம் டெக்னிக்கலாக மாட் டிக்கொள்ளாமல் விளையாண்ட ரவீந்தர், துறை அமைச்சர்களாக வருபவர்களிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வார். மற்ற நேர்மையான அதிகாரிகள் போல அவர்களிடம் எதையும் செய்ய முடியாது என சொல்லமாட்டார். அரசியல்வாதி களுக்கு கூடுத லாக சினிமா நடி கைகளையும் இல வச இணைப்பாக அனுப்பி வைப்பார் என ரவீந்தரைப் பற்றி நினைவு கூரும் வருமான வரித்துறை ஊழியர் கள், ""இப்படி இவர் 200 கோடி வரை சேர்த்திருக்கிறார். அந்தப் பணத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ஒன் றிற்கு ஃபைனான் சும் செய்திருக் கிறார்'' என விலா வாரியாக ரவீந்தரைப் பற்றி விளக்குகிறார்கள். கடைசியாக அவர் 50 லட்சம் லஞ்சம் வாங்கினார் என சிக்கிய "எவரான்" கல்வி நிறுவன வழக்கில் கூட சி.பி.ஐ. யால் உடனடியாக அவரை கைது செய்ய முடியவில்லை. சுமார் 116 கோடிக்கு வரி கட் டாத எவரான், தனது வரி கட்டாத கணக்கை 56 கோடியாக மாற்றிக் காட்டியது. இதை கண்டுபிடித்த ரவீந்தர், சௌகார்பேட்டை யைச் சேர்ந்த உத்தம்சந்த் மூலம் எவரான் அதி பர் கிஷோரிடம் 5 கோடி கேட்க... கிஷோர் 50 லட்சம்தான் தரமுடியும் என மத்திய அரசு பணியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி மூலம் பேரம் பேசினார். அந்த 50 லட்சத்தை ரவீந்தரின் வீட்டுக்கு 28-ம் தேதியே உத்தம்சந்த் கொண்டுபோய் கொடுத்தார். இந்தத் தகவலை அறிந்த சி.பி.ஐ. ஒரு நாள் முழுவதும் காத்திருந்து மறுநாள் 29-ம் தேதி அந்தப் பணத்தை ரவீந்தரின் வேலைக்காரர் வெளியே கொண்டுவரும்போது கையும் களவுமாகப் பிடித்தார்கள். இவ்வளவு திருவிளையாடல்கள் நடத்திய ரவீந்தரை கைது செய்த சி.பி.ஐ., அவரை தற்கா லிக வேலை நீக்கம் செய்ய கொடுத்த வேண்டு கோளை இரண்டு நாள்கள் கழித்துதான் வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாம். பிரகாஷ் thanks nakkeeran+raj,trichy

கருத்துகள் இல்லை: