செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கேக் கிடைக்கவில்லை என்பதற்காக பாணை நிராகரிக்காதீர்கள்’


புதுடில்லியில் இரு நாட்கள் இடம்பெற்ற ‘துயரும் தீர்வும்’ என்னும் கருத்தரங்கு எந்தவொரு தீர்வுக்கும் வர முடியாமல் முடிவடைந்திருக்கிறது. வழமைபோல் தமது சாதனையை நிகழ்த்தி முடித்த மனத்திருப்பதியில் ஈழத்தமிழர் தேசியத் தலைமைகள் வீடு திரும்பியிருக்கின்றனர். ‘ஒடுக்கப்பட்டவர்களே முதலில் உங்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையை குழி தோண்டிப் புதையுங்கள்’ - இதெல்லாம் ஒருபோதுமே நமது அரசியல் தலைமைகளின் காதில் ஏறப் போவதில்லை. ஏன் இந்த நிலைமையென்று கேட்டால் அதற்குரிய பதில் இந்தப் பத்தியாளரிடம் இல்லை. தவிர இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியளவிற்கு இந்தப் பத்தியாளர் புத்திசாலியுமல்ல. ஆனால் நமது அரசியல் தேடல் விருப்பிற்கும் நிர்ப்பந்தத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்ற புரிதல் இந்தப் பத்தியாளருக்குண்டு. மேலும் வாசிக்க >>>

கருத்துகள் இல்லை: