வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

Katunayaka 80 ஹெரோயின் வில்லைகள் வயிற்றினுள்ளிருந்து

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரஜை கைது:80 ஹெரோயின் வில்லைகள் வயிற்றினுள்ளிருந்து மீட்பு!

 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரஜை கைது:80 ஹெரோயின் வில்லைகள் வயிற்றினுள்ளிருந்து மீட்பு!

644 கிராம் நிறையுள்ள ஹெரோயின் வில்லை களை விழுங்கி இலங் கைக்கு எடுத்து வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு அதிகாரிக ளுக்கு கிடைத்த தகவல்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான பிகே 874 ரக விமானம் மூலம் இலங்கைக்கு வந்த மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். இதன் பின்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரின் வயிற்றிலிருந்து 80 ஹெரோயின் வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் கூறினர்.

இவை சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப் பட்டுள்ளது. சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: