புதன், 24 ஆகஸ்ட், 2011

மறக்க முடியாத காதலர்கள்...துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கினர் மனம் மாறாத பெற்றோர்

சென்னை : உண்மையான காதல் நிறைவேறாமல் போன மனவேதனையில் துடித்த காதல் ஜோடி, துப்பட்டாவில் உயிரை மாய்த்துக் கொண்டனர். வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன் (30). தி.நகர் துரைசாமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவி (28) மேலாளராக இருந்தார். இருவரும் காதலர்கள். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

மன வேதனையில் இருந்த ஸ்ரீதேவி நேற்று முன்தினம் மாலை நிறுவனத்தின் மாடியில் உள்ள சமையல் அறையில் துப்பாட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த கார்த்திகேயனும், அதே துப்பட்டாவில் தூக்கில் தொங்கி இறந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது: கார்த்திகேயனும், ஸ்ரீதேவியும் 6 ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் படித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள்  காதல் மலர்ந்தது. இதற்கு ஸ்ரீதேவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி அவர்களை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால், ‘‘கார்த்திகேயன் நல்ல வேலைக்கு செல்லட்டும், கார், சொந்த வீடு எல்லாம் வாங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்’’ என்று கூறியுள்ளனர். ஸ்ரீதேவி, கார்த்திகேயனிடம், ‘‘நமது உண்மையான காதல் ஜெயிக்க சீக்கிரம் நல்ல நிலைக்கு வாருங்கள்’’ என்று கூறினார். இதையடுத்து கார்த்திகேயன் சொந்தமாக கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் தொடங்கினார். இதற்கு மேனேஜராக ஸ்ரீதேவியையே நியமித்தார். இந்த நிறுவனம் மூலம் பயிற்சி அளித்து ஐடி கம்பெனிகளுக்கு தேவையான ஆட்களை அனுப்பினார். இதன்மூலம் அவரது வருமானம் பெருகியது. வீடு, கார் வாங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

கார்த்திகேயன் வீட்டில் மூத்தமகன் என்பதால், திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தினர். ஆனால் அவர் திருமணம் செய்தால் அது ஸ்ரீதேவியைதான் என்று உறுதியோடு தெரிவித்துள்ளார். தங்கைகள் மற்றும் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தார். எல்லாம் கைக்கூடி வரும் நிலையில் ஸ்ரீதேவியின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கார்த்திகேயன் சென்று கேட்டதற்கு அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்தே ஸ்ரீதேவியும், கார்த்திகேயனும் தற்கொலை செய்துள்ளனர்
A senior executive of a software training institute in T Nagar and his lover committed suicide inside the office one after another on Monday night.
The deceased were identified as M. Karthikeyan, 30, of Villivakkam and his girl friend, S. Sreedevi, 28, of Choolaimedu.
According to the police, the woman, after a reported argument with Karthikeyan, went inside a room in the Brindavan Street office and locked it.
When Karthikeyan and his colleagues became aware that something was amiss and broke open the door, they found Sreedevi had hanged herself.
They immediately took her to a nearby hospital where she was declared dead. “Hearing this a shocked Karthikeyan rushed back to office and committed suicide by hanging himself in the same room where his lover was found hanging,” the police said quoting the colleagues.
According to the police, Karthikeyan was managing the institute to prepare software graduates for jobs, while Sreedevi helped him out with administration. Both were in love for about five years, police said.

கருத்துகள் இல்லை: