வியாழன், 25 ஆகஸ்ட், 2011

எதற்கும் அடிப்பணிந்து அவசரகாலச் சட்டத்தை நீக்கவில்லை

எந்தவொரு அழுத்தங்களுக்கு அடிப்பணியும் அரசு தமதரசல்ல என அமைச்சரவை பதில் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லிபிய தலைவர் கடாபிக்கு நேர்ந்துள்ள தலையெழுத்து தமக்கு நேரும் என்ற அச்சத்திலா அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கியது என ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர், யுத்தம் நிறைவடைந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மாத்திரமே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: