வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனை தேதி குறிப்பு

இந்தியாவின் முன்னாள் பிறதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அதிகாலை தூக்கிலிடபப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரரிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் இது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மற்ற மூவரின் கருணை மனுக்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற தற்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: