சனி, 27 ஆகஸ்ட், 2011

வைகோவை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை.. கருணைமனு...

‘‘எம்டியெம்கே தலைவர் வருத்தத்துல இருக்காராமே... என் ஃபிரண்ட் விசாரிச்சா...‘‘ என்றாள் சுசி மாமி.

‘‘ம்ம்... சரிதான். ராஜீவ் கொலை தொடர்பா, மூணு பேர் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிச்சிருக்காங்க இல்லையா...? அது தொடர்பா பேசறதுக்கு சியெம்ட்ட அப்பாய்ன்மென்ட் கேட்டிருந்தாராம்... ஆனா, சியெம் கொடுக்கலையாம்... ஏற்கனவே, இலங்கை பிரச்னை தொடர்பா போராட்டம், ஆர்ப்பாட்டம் பண்ணிட்டிருக்கற தலைவர்கள், சியெம் சொல்லிதான் அப்படி செயல்படுறாங்கன்னு ஒரு பேச்சு இருந்தது... சியெம் அப்பாயின்மென்ட் கொடுக்காததால, அந்த பேச்சும் உண்மையில்லைன்னு ஆகிப் போச்சாம்...

அதனால, கருணை மனு நிராகரிப்பு தொடர்பா கோர்ட்ல வழக்கு தொடர போறாங்களாம்... இந்த வழக்கை திருமாவளவன், நெடுமாறன் கூடச்சேர்ந்து நடத்தப் போறாராம்...‘‘ என்றார் பீட்டர் மாமா

நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை: