ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சிதம்பரத்தில் வெளிநாட்டு மாணவ மாணவிகள் நிர்வாண நடனம்: தடுக்க சென்ற போலீசாருடன் மோதல்

சிதம்பரத்தில் உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். அவர்கள் நேற்று (20/08/2011) இரவு சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 100 பேர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவுக்கு பிறகும் நீடித்தது. அப்போது மது அருந்திவிட்டு அவர்கள் ஆப்பிரிக்க வகை நடனங்களை ஆடி கொண்டிருந்தனர். திடீரென மாணவ  மாணவிகள் மேலாடைகளை கழற்றிவிட்டு அரைநிர்வாணமாக நடமாடினார்கள். நேரம் செல்ல செல்ல முற்றிலும் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நடனமாடினார்கள்.

இந்த தகவல் போலீசுக்கு கிடைத்தது. எனவே இதை தடுப்பதற்காக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர் களுடன் மாணவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீசாரை உள்ளே வரக்கூடாது என கூறி வெளியே பிடித்து தள்ளினார்கள். மதுபாட்டில்களையும் வீசி எறிந்தனர். இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர்

கருத்துகள் இல்லை: