சனி, 1 பிப்ரவரி, 2020

பாஜக ஐடி விங் ரஜினிக்காக முழுநேரம் வேலை செய்கிறது. ..பார்ப்பன ஊடக புரோக்கர்கள்...

CAA பற்றி, குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு பற்றி வாய்திறக்காத
ரஜினிகாந்த் ஏன் 50 ஆண்டுகள் பழமையான அரசியல் நிகழ்வைப் பற்றி பொய் பேசினார்? நிற்க.
பாஜக துணையுடன், அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஊடக புரோக்கர்கள் துணையுடன், அவர்கள் போட்டிருக்கும் "வருமான வரி வழக்கு வாபஸ்" எனும் பிச்சையின் துணையுடன் பெரியாரைப் பற்றி அவதூறு பேசியவர்தான் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல், பேசிமுடித்து அது பிரச்சினை ஆனவுடன் சுப்பிரமணியசாமிக்கு ஃபோன் செய்து, "சப்போர்ட் பண்ணுங்க சார்," என கெஞ்சிக் கேட்டிருக்கிறார். அதை சுப்பிரமணியசாமி ஆங்கில ஊடகங்களில் போட்டுடைத்துவிட்டார். கோடி கோடியாக பணத்தைக் கொட்டி "ட்ரால் ஆர்மியாக" செயல்படும் பாஜக ஐடி விங் ரஜினிக்காக முழுநேரம் வேலை செய்கிறது. பாண்டே போன்ற பார்ப்பன ஊடக புரோக்கர்கள் ரத்தம் வரும் அளவுக்கு ரஜினிக்கு சொறிந்து விடுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் பெரியாரியர்களும், பொதுமக்களும் ரஜினியின் சாயம் காவி அல்ல, நிறமே காவிதான் என புரிந்துகொண்டு அவரை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பியர்கிரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினிக்கு அடிபட்டுவிட்டது என செய்திபோட்டால் பாரிசாலனுக்கு பஜாஜ் நிறுவனத்தில் 'அடிப்பட்ட' போது செய்ததைப் போல ஆயிரக்கணக்கில் 'ஹாஹா' ரியாக்ட் செய்துவைக்கிறார்கள்.
"இது தானா சேர்ந்த கூட்டம்," என ரஜினி வேண்டுமானால் பாலகுமாரன் வசனத்தைத்
திரையில் பேசியிருக்கலாம்.
ஆனால் இறந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆகியும் துரோகிகளைத் தன் மக்களுக்குக் காட்டிக் கொடுத்து, காக்கும் அரணாக கெத்தாக நின்று, தன் பெயருக்கு ஒன்று என்றால் ஒன்று சேரும் மக்களைக் காட்டி, "இது தானா சேர்ந்த கூட்டம்," என நிரூபித்துக்கொண்டிருப்பவர் பெரியார்தான்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: