திங்கள், 30 டிசம்பர், 2019

நாங்கள் பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்தவர்கள் .. வாரணாசி குருக்களின் பேட்டி.. வீடியோ

எனது பெயர் பத்து பிரசாத் சாஸ்த்திரி .  நான் துளசி மானஸ் கோயிலின் பிரதம குருக்கள் . நான் வாரணாசி வேதவிற்பன்னர்கள் சங்க தலைவர். நான் சாஸ்திரங்களை நம்புபவன். நான் இந்து  அடிப்படைவாதியாகும் .நான் ஜாதியையும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறேன் .. அதை நம்புகிறேன்.
கடவுளின் வாயிலிருந்து  பிராமணன் பிறந்தான்!  கைகளில் இருந்து  சத்திரியன் பிறந்தான் .! . வயிற்றில் இருந்து வைசியன் பிறந்தான் . கால்களில் இருந்து சூத்திரன் பிறந்தான்.
நான் வேதத்தில் இருந்ததை கூறுகிறேன் .
சிருஷ்டியை வேதமாதா  விளக்கி  கூறுகிறது..
வேதசாஸ்திர கண்ணாடி மூலமாக  மட்டுமே இந்த உலகை பார்க்க நாம் அறியமுடியும்.
வேறு விதமான வழிகளில் உலகை அறிய முயல்வது தவறு.
நான் விமானத்தை ஓட்ட முடியாது . அதை பைலட்தான் செலுத்த முடியும் .அது போலத்தான் ஒவ்வொரு வேலைக்கும் ஒருவர் இருக்கிரான் .
ஒவ்வொருவருக்கும் அதாவது ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் பிரம்மாவினால் விதிக்கப்பட்டு இருக்கிறது.
நாங்கள் எப்படி கற்று கொடுத்தாலும் ஒருவர் வேறு ஜாதிகளின் தொழிலை செய்ய முடியாது .
ஏனெனில் ஒவ்வொருவருக்கும் உரிய தொழில் பல பிறவிகளின் கர்ம வினைப்படி வந்து சேர்க்கிறது
வெறுமனே ஒருவர் படித்து விட்டு உயர்ந்த ஜாதிக்குரிய தொழிலை செய்துவிட முடியாது . அது பல பிறவிகளின் பயனாக வருவது.
நீ ஏன் சூத்திரனாக பிறக்கின்றாய்?
நீ ஏன் பெண்ணாக பிறக்கின்றாய்?
ஒருவருக்கு ஏன் தோல் வெள்ளையாக இருக்கிறது?
வேறு ஒருவருக்கு ஏன் தோல் கருப்பாக இருக்கிறது?
இதெல்லாம் ஜென்ம ஜென்மாந்திரங்களில் செய்த கர்ம வினை பலனாகவே வருகிறது.

ஒரு கோர்ட்டில் பீயூனாக வேலை செய்பவன் நாற்பது வருடங்கள் அங்கு வேலை செய்தாலும் அவன் ஜட்ஜ் ஆக முடியாது  ஏன்?
அது போலத்தான் ஒருவர் எவ்வளவு காலம் படித்தாலும் உயர்ந்த ஜாதிக்குரிய தொழிலை செய்துவிட முடியாது!
அவனுக்கு  அந்த அதிகாரம் கிடையாது..
அது பூர்வ ஜென்ம கர்ம வினைப்பயனின் படி வரவேண்டும்.
ஒரு பீயுன் எப்போதும் பீயுன்தான்
ஒரு சூத்திரன் எப்போதும் சூத்திரன்தான்  அதை மாற்ற கூடிய சக்தி யாருக்கும் கிடையாது.
ஒரு சூத்திரன் எவ்வளவு படித்தாலும் அவனுக்கு ஒன்றும் தெரியாது . அவனால் அது முடியாது/
நாம் சுதந்திரம் அடைந்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் ஒரு சூத்திரனாலும் உயர்ந்திட முடியாது/
இத்தனை வருடங்கள் ஆகியும், கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தும் பொது பரீட்சைகளில்  ஏன் ஒரு தலித் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை?
உனது விரல்களை உனது மூக்குக்குள் விடுவாயா? இல்லையே ? அந்த அழுக்கு உனது விரல்களில் படுவதை நீயே தவிர்க்கிறாய்? அப்படி என்றால் நீயும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறாய்தானே?
இதுதான் ஜாதி அமைப்பின் அழகு ...
இது போன்ற கண்ராவி கருத்துக்கள் இந்த காசி பார்ப்பனன் திமிரோடு முழக்கி தள்ளுகிறார் ..
மீதியை நீங்களே காணொளியில் பாருங்கள்


கருத்துகள் இல்லை: