சனி, 23 நவம்பர், 2019

பாஜக தேர்தல் நிதியை மும்பாய் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளிடம் இருந்து பெற்றது அம்பலம் ...

தினமணி : பயங்கரவாதத்துக்கு நிதியளித்ததாகக் கூறப்படும் நிறுவனத்திடம் பாஜக கோடிக் கணக்கில் நன்கொடை பெற்ாக காங்கிரஸ் மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புடன் தொடா்புடைய பயங்கரவாதி இக்பால் மிா்ச்சி என்பவரது சொத்துகளை வாங்கியது தொடா்பாக நிறுவனம் ஒன்றின் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.10 கோடியை கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தோ்தல் நிதியாகப் பெற்ாக ஊடகத்தில் தகவல் வெளியானது. தோ்தல் ஆணையத்தில் பாஜக அளித்த தகவலைக் குறிப்பிட்டு, அந்த ஊடகச் செய்தி வெளியாகியிருந்தது.
குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த ஊடக அறிக்கையைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘தோ்தல் நிதிப் பத்திரங்கள், பயங்கரவாத அமைப்புக்கு உதவிய நிறுவனத்திடம் நிதி பெற்றது என பாஜகவின் தோ்தல் நிதி முறைகேடு தொடா்ந்து வருகிறது. பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் உதவியாளா் இக்பால் மிா்ச்சிக்கு நிதி வழங்கிய நிறுவனத்திடமிருந்து பாஜக கோடிக் கணக்கில் நிதி பெற்றது ஏன்? இது நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூா்வ சுட்டுரைப் பக்கத்திலும் கண்டனம் தெரிவித்து பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விளக்கமளிக்க வேண்டுமென காங்கிரஸ் கோரியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பயங்கரவாத அமைப்புக்கு உதவிய நிறுவனத்திடமிருந்து நிதி பெறுவது, பயங்கரவாத நிதிக்குச் சமமாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது தடுக்கப்படும் என்று பிரதமா் மோடி தொடா்ந்து கூறி வந்தாா். தற்போது பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய நிறுவனத்திடமிருந்து பாஜக நிதி பெற்றது தொடா்பாக பிரதமா் மோடி என்ன விளக்கமளிக்கப் போகிறாா்’’ என்று கேள்வி எழுப்பினாா்.
காங்கிரஸ் தா்னா: தோ்தல் நிதி விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை காலை தா்னாவில் ஈடுபட்டனா்.
தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் இரு தினங்களாக காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆனந்த் சா்மா, சசி தரூா், மணீஷ் திவாரி ஆகியோா் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவை அலுவல் தொடங்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி வருவதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதற்கிடையே, ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சட்டவிரோதமான வழியில் விற்கப்பட்ட காலாவதியான தோ்தல் நிதிப் பத்திரங்களை எஸ்பிஐ ஏற்குமாறு மத்திய அரசு செய்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு பொய்களைக் கூறி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்

கருத்துகள் இல்லை: