ஞாயிறு, 17 நவம்பர், 2019

இலங்கை அதிபர் தேர்தல் - கடும் போட்டி .. கோத்தபாய முன்னிலையில்

இலங்கை தேர்தல்vikatan.com/ - சத்யா கோபாலன் : இலங்கையில் நடந்து வரும் அதிபர் தேர்தலில் அங்கு பெரும் கட்சியாக உள்ள புதிய ஜனநாயக முன்னணி கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அந்த நாட்டில் 8-வது அதிபர் தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 12,845 வாக்குச்சாவடிகளில் 80% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.




இலங்கை தேர்தல்


இலங்கை தேர்தல்
Twitter/@SriLankaTweet
நேற்று மாலை ஐந்து மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மாலை ஆறு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருந்தாலும் அங்கு மிகப் பெரிய கட்சிகளாக உள்ள புதிய ஜனநாயக முன்னணி கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இந்த இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. தபால் வாக்குகளிலும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌ஷே முன்னிலையிலிருந்தார். அதேபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையிலிருந்தார்.


இலங்கை தேர்தல்


இலங்கை தேர்தல்
AP

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி புதிய ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, ஐக்கிய தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌ஷேவை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
ஆனால், ஒரு மணி நேரத்துக்குள் ஒரு லட்சம் வாக்குகளை சமன் செய்து புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட சுமார் 37,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் கோத்தபய ராஜபக்‌ஷே

கருத்துகள் இல்லை: