புதன், 17 ஜூலை, 2019

திராவிட இயக்கங்கள் மீது பார்ப்பன பத்திரிகைகளின் தொடர் பொய்கள் ....

Chozha Rajan ; அண்ணா வாரிசு அரசியலை எதிர்த்தாரா? இன்றிலிருந்து சோழன் என்ற எனது பெயரை சோமாஸ் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அப்போதுதான் நான் கிறுக்குத்தனமாக ஏதேனும் எழுதினாலும் விவாதத்துக்கு உட்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஏன் திமுக தலைமையே கூட என்னை அழைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தாலும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
பெரியார் வாரிசு அரசியலுக்கு ஆதரவாக போனதால்தான் அண்ணாவே திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து போனார் என்று லூசுத்தனமான ஒரு கண்டுபிடிப்பை ஒருத்தர் வெளியிட்டிருக்கிறார். நிஜம் அதுவா? அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். மேலெழுந்தவாரியாக எதையாவது திமுகவுக்கு எதிராக சொல்ல வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் இட்டுக்கட்டலாம்.
நாடு விடுதலை பெற்றுவிட்டது. இனி நம்மை நாமே ஆள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நமது இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்றபடி இயக்கம் தயாராக வேண்டும் என்று ஒரு பிரிவினர் கருதத் தொடங்குகின்றனர். பெரியாருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. அவரைக் கவனித்துக் கொள்ளும் மணியம்மையாருக்கு இயக்கத்தினர் மரியாதை கொடுக்கவில்லை.
பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்தை பெரியாருக்கு வாரிசாக ஒரு குழுவினர் கருதியிருக்கின்றனர். தனக்குப் பிறகு மணியம்மைக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என்றுதான் பெரியார் மணியம்மையை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்திய விடுதலையையும் தேர்தல் அரசியலையும் பெரியார் எதிர்க்கிறார். தேர்தல் அரசியல் சமரசங்களுக்கு இடமளித்துவிடும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் வேளையில், விடுதலையை ஆதரித்தும், பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்தும் அண்ணா தலைமையில் ஒரு குழு கலகத்தை தொடங்குகிறது. இதன் முடிவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயம் என்பது எனது கருத்து. இதை வெறும் வாரிசு அரசியலுக்கு எதிரான நடவடிக்கையாக மட்டும் என்று கருதுகிறார் என்றால் அவருடைய அறிவு அவ்வளவுதான்.
மணியம்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மட்டும் திமுக உதயமாகிவிடவில்லை. மணியம்மை திருமணம் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய சலனத்தையும் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் அறிந்திருந்தனர். முதிய வயதில் இளம் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய நிலையில் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்பது மண்டூகங்களுக்கு புரியாது. இன்றைக்கும் தந்தை பெரியாரின் அந்த திருமணத்தின் பின்னணியை புரிந்துகொள்ளாத அறிவிலிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சம்பத்துக்கு பெரியாரின் வாரிசாக தகுதியில்லையா என்ற கேள்வியும் அப்போது திராவிடர் கழகத்தில் எழத்தான் செய்தது. தந்தை பெரியாரின் ஒரே நோக்கம், தனது சிந்தனைகள் தொடர்ந்து பரப்பப்பட வேண்டும். நூற்றாண்டு கழித்தும் தனது சிந்தனைகளுக்கு தேவை இருக்கிறது என்பதையெல்லாம் அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான், தனது சொத்துக்களை ட்ரஸ்ட்டாக்கி, அதன் பாதுகாவலராக மணியம்மையை நியமித்துச் சென்றார்.
திராவிடர் கழகம் வாரிசுகளுக்கு உரியதாக இல்லை. தந்தை பெரியாரின் எண்ணங்களை நிறைவேற்றத் தகுதியானவர்களிடமே அடுத்தடுத்து இருக்கிறது.
அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் வாரிசு நியமிக்கும் போக்கை எதிர்த்தே வெளியேறினார் என்று நிறுவ முயற்சிக்கும் மூடர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். தந்தை பெரியாரை எதிர்த்து அரசியல் செய்தாலும், ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் தனது அரசாங்கத்தை தந்தை பெரியாருக்கே காணிக்கை ஆக்கியவர் அண்ணா. அதன்மூலம், தந்தை பெரியாரின் சிந்தனைகளையோ, முடிவுகளையோ அவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை என்பதை இவர்கள் பதிவு செய்யவே மாட்டார்கள்.
பெரியார் தனது சிந்தனைகளை செயல்படுத்த காங்கிரஸ் அரசைக் கேட்பதற்கு மாறாக நாமே ஆட்சியமைத்து நமது சிந்தனைகளை சட்டமாக நிறைவேற்றலாமே என்கிற அண்ணாவின் யோசனையை பெரியார் நடக்காத காரியமாக நினைத்தார். ஆனால், தனிக்கட்சி தொடங்கி பெரியாரின் அரசாங்கம் என்ற முத்திரையுடன், பெரியாரின் சிந்தனைகளை அடுத்தடுத்து சட்டமாக்கி, அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளையும் எடுக்கிற அளவுக்கு காரியமாற்றிய அரசு அண்ணாவின் அரசு.
பெரியாரின் அரசாங்கமாக முத்திரை குத்திய அண்ணா, பெரியாரின் வாரிசு ஏற்பாட்டை எதிர்த்து வெளியேறினார் என்பது மிகமோசமான கற்பனை.
மன்னர்கள் காலத்திலிருந்து வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தி, பிச்சையெடுத்து பிழைத்தவர்கள் யார் என்பது தமிழக வரலாற்றி தெளிவாகவே பதிவாகியிருக்கிறது.
திமுகவில் வாரிசு அரசியல் குறித்து குறைகூறுகிறவர்கள், எம்ஜியார் நினைத்தால் ஒருத்தரை ஐசரி வேலன் போன்ற அரைவேக்காடுகளையும், முசிறிப்புத்தன் போன்ற ரசிகக் குஞ்சுகளையும் அமைச்சராக்கியதை ஜனநாயக அற்புதம் என்பார்கள். கழுதையைக்கூட தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைப்பார் என்று பெருமைப்படுத்துவார்கள். நாங்களெல்லாம் ஜீரோ. எம்ஜியார்தான் நம்பர் ஒன் என்று அமைச்சர்கள் பேசுவதை எம்ஜியாரின் ஆற்றல் என்று பிதற்றுவார்கள். ஆட்சி முடிவதற்குள் அனுதாப ஓட்டுக்காக ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடத்தி ஜெயிக்கிறவரை திமுகவை ஊமைக்குத்து குத்தினார் என்று புளகாங்கிதம் அடைவார்கள்.
எம்ஜியாரின் ஜனநாயகத்தில் எங்கோ கிடந்த ஜெயலலிதாவை ஒரே இரவில் அதிமுகவில் சேர்த்து உடனடியாக கொள்கை பரப்பு செயலாளராக்கி, கட்சியில் தனக்கடுத்த நிலையை கொடுத்ததைத்தான் பாப்பார கூட்டம் மிகச் சிறந்த நடவடிக்கை என்று கொண்டாடும்.
ஜெயலலிதாவின் மிகச்சிறந்த ஜனநாயகம் என்னவென்றால், அதிமுகவில் தனக்கு ஆதரவாக நின்று முதல்வராக்க முக்கி முக்கி பாடுபட்டவர்களையெல்லாம் உதிர்ந்த ரோமங்களாக்கி, மன்னார்குடி மாபியாக்களை தனக்கு நெருக்கமாக வைத்து கட்சிக்காரர்களை அவர்கள் கால்களில் விழவைத்ததுதான் என்று இதே பாப்பாரக்கூட்டம் சொல்லும்

கருத்துகள் இல்லை: