வெள்ளி, 29 மார்ச், 2019

நீட்டை விட மகா கொடூர சதித்திட்டம்.. கேள்வி தாள்கள் கொடுமை ..கல்வி கட்டமைப்பை தகர்க்கும் முயற்சி

சர் வின்ஸ்டன் சர்ச்சில் : · நீட்டை விட மஹா கொடூர சதித்திட்டம்
நேற்று முன்தினம் மார்ச் 25 அன்று 10ம் வகுப்பு கணிதம், மார்ச் 7 அன்று +2 கணிதம். அண்ணா பல்கலையின் B.E. செமஸ்டர் தேர்வுகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் கணிதத்தேர்வுகள் அனைத்திலும் குறிவைத்து கைவைத்து இருக்கிறார்கள்.
கேள்வித்தாள்கள் மகா கொடுமை. உளவியல் ரீதியான தாக்குதல். இது நீட்டை விட கோரமான சதித்திட்டம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பை குலைத்து நாசமாக்கி இனி எழ முடியாத நிலைக்கு தள்ளும் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலமையில் உள்ள அதிமுக அரசாங்கம் இதற்கு பரிபூர்ண ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
இது போதாததற்கு 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பள்ளித்தேர்வுகள் பொதுத்தேர்வுகளாக நடத்தப்படும் என்று சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் தான் இந்த தேர்வு தில்லுமுல்லுகளை செய்ய முடியும் என்று நினைக்கிறது காவித்துவ கொடூர சிந்தனை வில்லன்கள் முகாம். இந்த விபரீதம் தெரியாமல் எல்லாரும் தேர்தல் குதூகலத்தில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: