வியாழன், 28 மார்ச், 2019

சீமான் .. கட்சியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் சீட்டு ... சூட்கேஸ் கைமாறியது?


Anirudha Brahmarayan: வாங்கடா கூமுட்டை தம்பிகளா உங்களுக்காகத் தான் அடுத்த ஸ்பெசல் ஐயிட்டம்.
இன்றைக்கு நம்ம பார்க்கப்போகும் ஸ்பெசல் ஐயிட்டம் "சாய் வினோத் சனையர்". கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வினோத் MA,Mphil, Phd தான் "சாய் வினோத் சனையர்".
இவரது ஒரிஜினல் பெயர் சாய் வினோத். ஆனால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த பிறகு வந்தேறி சாய் பெயரை வைக்க முடியுமா? அதனால் வினோத் ஆகி விட்டார். பிரச்சனை அதுவல்ல. இவர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்ததே இரண்டு மாதங்களுக்கு முன்பு தான். "பத்து கட்சியில் சேர்ந்து நான் டான் ஆகல; நான் இருந்த பத்து கட்சியுமே டான் தான்" என நாம் தமிழரில் சேரும் முன் பல டான் கட்சிகளில் இருந்துள்ளார். முதலில் கொஞ்ச காலம் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து சுற்றியுள்ளார். பிறகு சகாயம் ஐஏஸ் மக்கள் பாதை. பிறகு இளைஞர் கட்சி என கண்ணில் கண்ட கட்சிக்கெல்லாம் ஆதரவாக இருந்துள்ளார். அதன் பிறகு 2019 பிப்ரவரி மாதம் (போன மாதம்) திடீர் ஞானோதயம் வந்து நாம் தமிழர் கட்சியில் இன விடுதலையை வென்றெடுக்க தம்மை இணைத்துக் கொள்கிறார். உடனடியாக மார்ச் மாதம் சீட் வழங்கப்படுகிறது.
இவர் நாம் தமிழர் கட்சிக்காக
கலந்து கொண்ட போராட்டங்கள் - 0,
‎ பங்கேற்ற பொதுக் கூட்டங்கள் -0,
‎ செய்த நலத்திட்ட உதவிகள் - 0,
‎தேர்தல் பிரச்சாரங்கள் -0.
நாம் தமிழர் பற்றி இந்த பிப்ரவரி மாதத்திற்கு முன் இவர் வாய் திறந்து பேசியது கூட இல்லை.
ஆனாலும் கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் இவர் நாம் தமிழர் கட்சியின் திருச்சி வேட்பாளர். தமிழ்நாட்டில் முக்கிய தொகுதியின் வேட்பாளர்.
இதே கட்சியில் இணையத்திலும், களத்திலும் மாங்கு மாங்கு என பத்து வருடமாக உயிரைக் கொடுத்து உழைத்த முட்டாத்தம்பிகள் இருக்கின்றனர். கேடுகெட்ட கட்சிக்காக தங்கள் பொருளாதாரத்தை இழந்து சீமான் பின்னால் நாய் மாதிரி அலைந்து திருச்சி ஏர்போர்ட்டில் மதிமுகவினரிடம் அடிவாங்கி, ஜெயிலுக்கு போன டம்ளர் தம்பிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் சீட் கிடையாது.
2016 தேர்தலின் போது தூங்காமல், உண்ணாமல் கைக்காசைப் போட்டு நாம் தமிழருக்காக பிரச்சாரம் செய்தவர்கள் உள்ளனர். 24 மணி நேரமும் அதே பிழைப்பாகத் திரிந்தனர். ஆனால் அதேநேரம் நம்ம ஐயிட்டம் "சாய் வினோத் சனையர்" 2016 தேர்தல் நேரத்தில் தேர்தலின் பரபரப்பே இல்லாமல் சாய் பாபா படத்தை முகநூலில் ஷேர் செய்து சாய் ராம் என ஆர்கஸம் அடைந்து கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் அவர் வேட்பாளர்.
நாம் தமிழர் கட்சிக்காக யூட்யூப்பில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. ஆனால் ஷார்ட்பிலிம் இயக்குனர், தயாரிப்பாளர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் சாய் வினோத்தின் சார்பில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இதுவரை ஒரு வீடியோ கூட வெளியிடப்பட்டதில்லை.
முகநூல் பிரபலம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சாய் வினோத் சனையர் இந்த பிப்ரவரி மாதத்திற்கு முன்னால் வரை நாம் தமிழருக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட போட்டதில்லை.
வேறு என்ன தான் செய்திருக்கிறார்? ஏமாற்றுப் பேர்வழி ஹீலர் பாஸ்கரின் வீடியோக்களை ஷேர் செய்திருக்கிறார். தடுப்பூசி இலுமினாட்டி சதி என்ற மீமை ஷேர் செய்திருக்கிறார். ஆயிரம் முறைக்கு மேல் சாய்பாபா படத்தை ஷேர் செய்திருக்கிறார். இருநூறு முறை கேன்சருக்கு நாட்டு மருத்துவத்தை ஷேர் செய்திருக்கிறார். "இந்தக்குழந்தை காணாமல் போய்விட்டது. கிடைக்கும் வரை ஷேர் செய்யுங்கள்" என 2010ல் காணாமல் போன குழந்தையின் படத்தை 2018 வரை ஷேர் செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எந்த கட்சியையும் உள்ளே விட வேண்டாம் என் மீம் போடுகிறார். (சீமானையும் சேர்த்து) ஊரில் உள்ள அனைத்து லேகிய வியாபாரிகளின் ஏமாற்று மருத்துவத்தையும் தேடித் தேடி ஷேர் செய்திருக்கிறார்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. "முதுகில் குத்திய ஓபிஎஸ்ஸை விட உயிர் காத்த சின்னம்மாவிற்கே ஆதரவு" என சசிகலாவை ஆதரித்து எல்லாம் போஸ்ட் போட்டுள்ளார் இந்த திருச்சி கள்ளர். ஆனால் பாவம் நாம் தமிழர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கட்சியில் இருந்தால் தானே பேச.
சாய் வினோத் சனையர் என்பதில் சனையர் என்பது என்ன? தஞ்சாவூர் கள்ளர் சாதியினரின் ஒரு பிரிவினருக்கான பட்டமாம். அதாவது சாதி வெறியில் எவ்வளவு ஊறித் திளைத்திருந்தால் கள்ளர் என்ற சாதிப் பெயரைக்கும் மேலாகச் சென்று சனையர் என்ற உட்சாதிப்பெயரை தன் பெயருடன் இணைக்க தோன்றும? சாதி வெறியின் உச்சம் இதெல்லாம்.
ஆனால் இந்தப் பக்கம் சீமான் கையை மடக்கி "இடை வந்த சாதி நோய் நோய் நோயே" என லூசு மாதிரி கத்திக் கொண்டிருக்கிறான். அவன் கட்சி வேட்பாளர் சீமானாவது ஹைகோர்ட்டாவது என உட்சாதி பட்டம் வரை பேரோடு சேர்த்துக் கொண்டு திரிகிறான். இது தான் இவனுங்க சாதியை ஒழித்து தமிழராய் இணையுறது. த்தூஊ.‌. வெட்கமாயில்ல.
இதுமட்டுமல்லாமல் கஞ்சா எண்ணெயால் கேன்சர் குணமாகிறது. எனவே கஞ்சாவை அனுமதிக்க வேண்டும் என எழுதுகிறார். எச்.இராஜா படம் வைத்த சங்கிகளின் சாதி வெறி மீம்களை பரப்புபுகிறார். கிறித்துவ மதத்தலைவர், போப் ஒரு பெண்ணை வெறித்துப் பார்ப்பது போன்ற போட்டோசாப் படத்தை ஷேர் செய்து கிறித்துவர்களை திட்டுகிறார். இந்துப் பெண்களை கிறித்துவர்கள் திட்டமிட்டு காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என கட்டுரை எழுதுகிறார். (ஒரு வேளை சீமானை திட்றாரோ?) மாட்டு இறைச்சி தடையை ஆதரித்து எழுதுகிறார்.
பொட்டை என பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் வார்த்தைகளை தயக்கமின்றி பயன்படுத்துகிறார். இரண்டு நாட்களாக நமக்கு பாசிச வகுப்பெடுக்கும், பெண்ணிய வகுப்பெடுக்கும் சீமானிய தம்பிகள் தனது வேட்பாளரே இப்படி பேசினார் என்பதைப் பார்த்தால் தூக்குப்போட்டு செத்துவிடுவார்களோ? மாட்டார்கள். அதற்கு கொஞ்சமாவது மானமும் அறிவும் வேண்டும்.
கட்சியில் சேர்ந்தே இரண்டு மாதம் தான் ஆகிறது. கட்சிக்காக போராட்டம் நடத்தியது இல்லை. பொதுக்கூட்டம் நடத்தியது இல்லை. ஒரு வரி முகநூல் பதிவு கூட போட்டது இல்லை. சுய வாழ்விலும் நேர்மை இல்லை. பொது வாழ்விலும் நேர்மை இல்லை. பிறகு எப்படி சீட் கிடைத்தது?
விசாரிக்கும் போது நமக்கு அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன. வேட்பாளராக அறிவிக்க மிகுந்த பணம் கைமாறி உள்ளதாம். அதாவது நீ பணம் கொடுத்தால் பத்து நாளைக்கு முன்னால் கட்சியில் சேர்ந்தாலும் சீட். வேலையை விட்டுட்டு போஸ்டர் ஒட்டுனவன் எல்லாம் கடைசி வரை போஸ்டர் ஒட்ட வேண்டியது தான். இது தான் அண்ணன் சீமானின் அன்பான சர்வாதிகாரம்.
தன் பையன் ஆசைப்பட்டால் கார் வாங்கி கொடுப்பாங்க. பைக் வாங்கி கொடுப்பாங்க. அதுபோல சாய் வினோத் சனையரின் அப்பா நாம் தமிழரில் ஒரு சீட் வாங்கி கொடுத்தாராம். "கழுத, காசை கொடுத்தா சீட் கொடுக்கப் போறான். நீ ஏன்டா கவலைப்படுற தங்கம்?"
சரி கஜா புயல், காவிரிப் பிரச்சனைக்காக போராடியவராமே. இந்தியன் படத்தில் போஸ்ட் பாக்ஸில் நெருப்பள்ளி போட்டதற்காக தியாகி ஆவார்கள் தெரியுமா அதே கதைதான். எப்பவும் போல நான்கு மீமை கஜா புயலுக்கும் காவிரிப் பிரச்சனைக்கும் ஷேர் செய்துள்ளார். இதற்கெல்லாம் சீட் கொடுக்கனும்னா தமிழ்நாட்ல ஒரு கோடிப் பேருக்கு சீட் கொடுக்கனும். காவிரி போராட்டம் நடக்கும் போது கூட்டத்தோட கூட்டமா கோசம் போட்டவர்களை, தெருவில் நின்றவர்களை எல்லாம் திடீரென போலிஸ் அள்ளிக்கொண்டு போய் ரிமாண்ட் செய்தது‌. அது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. சும்மா ரோட்டில் நின்று கொண்டிருந்த 60 பேர் கைது செய்யப்பட்டார்கள். அப்படி "ஏய் நான் ஜெயிலுக்கு போறேன்" என ஜெயிலுக்கு போனவர் தான் நம்ம ஐயிட்டம். அந்தப் போராட்டத்திலும் நாம் தமிழர் சார்பில் இவர் கைது செய்யப்படவில்லை. தெருவில் நின்று வேடிக்கை பார்த்த போது தான் கைது. அதேபோல ஜல்லிக்கட்டு போராட்டத்தை எல்லாம் இவர் ஒருங்கிணைக்கவில்லை. திருச்சியில் போராட்டம் செய்தவர்களுக்கு இவர் யாரென்று கூட தெரியாது.
போராட்டத்தால் வேலை போச்சே - நம்ம ஐட்டம் ஏதோ டின்பிஎஸ்சி தேர்வு எழுதி நிரந்தர வேலையில் இருந்த மாதிரி எஃபெக்ட் போடுறார். அதெல்லாம் இல்லை. அவர் வேலை மாதம் 5000 சம்பளத்திற்கு பகுதி நேரப் பணியாளர். அவசரத்துக்கு யாராவது லீவ் போட்டா இப்படி எடுத்துக்குவாங்க. பிறகு அனுப்பிடுவாங்க. இது போல தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கெஸ்ட் லெக்சரர்கள் உள்ளனர். இந்த வேலையைத் தான் பேராசியர் வேலை என காசு கொடுத்து மீம் போட வைக்கிறார் நம்ம ஐயிட்டம். அந்த வேலையில் இருந்தும் ஒழுங்காக வேலைக்கு வராததால் தான் நீக்கப்படுகிறார்.
2015 ஆம் ஆண்டில் இருந்து சுயதொழிலாக போட்டோகிராபர் வேலை, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் வேலை பார்க்கிறார். இதைத்தான் தனது தொழில் என வேட்புமனுவிலும் கூறியுள்ளார். பிறகு எதற்கு பேராசிரியர் வேலை, போராட்டத்தினால் வேலை இழந்தார் என்ற பிட்டெல்லாம்? எல்லாம் ஒரு உணர்ச்சியைத் தூண்டி மக்களிடம் பிச்சை எடுக்கத்தான். சீமானை விட கில்லாடி தான் சாய் வினோத் சனையர்.
இந்த போட்டோகிராபர் வேலை செய்ய தான் முக்கி முக்கி ஆங்கில இலக்கியத்தில் Phd பண்ணினாரா என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஆங்கில இலக்கியம், political science போன்ற நேர்ந்துவிடப்பட்ட பாடப்பிரிவுகளில் Phd பட்டம் கூவிக் கூவி விற்கப்படுவது கல்வித்துறையில் இருக்கும் அனைவரும் அறிந்ததே. பணம் கட்டி இரண்டாம் வருடம் Phd கிடைக்கும். நாடாளுமன்ற வேட்பாளர் சீட்டையே வாங்கும் போது Phd எல்லாம் ஒரு விசயமா?
தனது ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மூலம் தனக்கு தானே மீம் தயாரித்து விழித்துக்கொள் தமிழா, குப்புற படு தமிழா, நட்டமா நில்லு தமிழா என பல பெயர்களிலும் இவரே இவரை புகழ்ந்து பரப்பிக் கொள்கிறாராம்.
தெலுங்கு ஓட்டு அதிகம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் தேமுதிகவின் தெலுங்கு வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழரின் சார்பிலும் தெலுங்கு வேட்பாளர் எதேச்சையாக நிறுத்தப்பட்டது போல, கள்ளர் ஓட்டு அதிகம் உள்ள திருச்சி தொகுதியிலும் கள்ளர் வேட்பாளர்கள் திருநாவுக்கரசர், சாருபாலா தொண்டைமான் ஆகியோரை எதிர்த்து கள்ளர் வேட்பாளர் சாய் வினோத் சனையரை எதேச்சையாக சீமான் நிறுத்தியுள்ளார். நம்புங்கள் இது தான் மாற்றதிற்கான அரசியல். நம்பலைனா விச ஊசி போட்ருவேன்.
2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாம்தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்போது சீமானை நம்பி சொந்தக்காசை இலட்சக்கணக்கில் செலவு செய்து 234 தொகுதியிலும் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். அவர்களில் பலர் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஐநூறு ஓட்டு, ஆயிரம் ஓட்டு என வாங்கி டெபாசிட் கூட கிடைக்காமல் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்து வாழ்வை தொலைத்து தெருவில் திரிகின்றனர். அவர்களில் யாருக்குமே இப்போது சிட் இல்லை (4பேரைத் தவிர). கட்சியில் சேர்ந்து இரண்டு மாதமே ஆன ஒருவனுக்கு, எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காத ஒருவனுக்கு, கொள்கை என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் ஒருவனுக்கு, அப்பட்டமாக சாதிப் பெருமை பேசும் ஒருவனுக்கு, பெண்களை கேவலமாக பேசும் ஒருவனுக்கு எப்படி சீட் கிடைத்தது?
சீமானுக்கும் சூட்கேசுக்குமே வெளிச்சம். நாம் தமிழர்டா....

கருத்துகள் இல்லை: