வியாழன், 28 மார்ச், 2019

கமலஹாசன் : ஏழைகள் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்வார்கள்; பணக்காரர்கள் அரசியலில் ஊழல் செய்யமாட்டார்கள் !


LR Jagadheesan : “வருமானமில்லாத ஏழைகள் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்வார்கள்; பணக்கார செல்வந்தர்கள் அரசியலில் ஊழல்
செய்யமாட்டார்கள்” கமலஹாசனின் புதிய கண்டுபிடிப்பு.
சுதந்திர இந்தியாவில் முதல் முதலில் ஊழலுக்காக மத்திய அமைச்சர் பதவியை இழந்தவரின் பெயர் டி டி கிருஷ்ணமாச்சாரி. சுதந்திர இந்தியாவில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஒரே தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா. இரண்டுபேருமே ஏழைகளும் அல்ல. படிக்காதவர்களும் அல்ல.
மல்லையா முதல் மோடி வரை அரசு வங்கிப்பணம் பல்லாயிரம் கோடிகளை ஆட்டையை போட்டுவிட்டு வெளிநாட்டில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவரும் யாருமே ஏழைபாழைகள் அல்ல. கோடீஸ்வரர்கள். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் ஏழைகள் அல்ல.
உண்மை வரலாறு இப்படியிருக்க இந்த அரைவேக்காட்டு உளறலை அம்பி எப்படி இப்படி கூசாமல் வாந்தியெடுக்கிறது? எந்த தைரியத்தில் அடிப்படையில் மொத்தமாக ஏழைகளை குற்றவாளிகளாக்கி கூனிக்குறுக வைக்கிறது?
“ஏழைகளே நீங்கள் வாக்கு மட்டும் போடுங்கள்; அரசியல் ஆண்டைத்தனம் பண்ணும் வேலையை பணக்காரர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்கிறாரா?
இவர் சொல்லும் இலக்கணப்படி ஏற்கனவே தொழில்செய்து சம்பாதித்த பின் அரசியலுக்கு வந்த மாஃபா பாண்டியராஜன் என்பவர் அரசியலில் செய்த மக்கள் நல சேவைகள் என்ன? NEETஐ திணித்து அனிதாக்களை சாகடித்ததைத்தவிர.

கருத்துகள் இல்லை: