சனி, 28 ஜூலை, 2018

தமிழ்நாட்டுக்காக புலிகளும் ஈழத்தமிழர்களும் இதுவரை செய்தது என்ன?

AThi Asuran : "ஈழத்தைப்பற்றிப் பேச கொளத்தூர் மணிக்கும், கோவை
இராமக்கிருட்டிணனுக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று சீமான் பேசிய பிறகும், விடுதலைப்புலிகள் இன்றுவரை சீமானைக் கண்டித்திருக்கிறார்களா?
திராவிடர் இயக்கங்களின் தோழர்கள், புலிகளுக்காக இளமையை இழந்து, பொருளை இழந்து, வாழ்வை இழந்து, உயிரையே இழந்து போராடிக் கொண்டிருந்தபோது - சினிமாவில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் - பார்ப்பனர்களுக்கு எடுபிடிகளாக இருந்தவர்களும், இன்று திராவிடர் இயக்கங்களையும் எம் தலைவன் பெரியாரையும் கொச்சைப் படுத்துகிறார்கள். அதை ஒரே ஒருமுறையாவது விடுதலைப்புலிகள் கண்டித்திருக்கிறார்களா?
தமிழ்நாட்டுத் தமிழர்களின் எந்தச் சிக்கல்களுக்காகவாவது விடுதலைப்புலிகள் இன்றுவரை குரல்கொடுத்திருக்கிறார்களா?
தமிழ்நாட்டுத் தமிழர்களின் அழிவுக்கும் - புலிகளின் அழிவுக்கும் காரணமான பார்ப்பனர்களை என்றைக்காவது "பார்ப்பனர்கள்" என்று மறந்தாவது உச்சரிக்கவாவது செய்தார்களா?
ஊர்த் தமிழர்கள், சேரித்தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை என்றைக்காவது வெறும் அறிக்கை மூலமாவது கண்டித்திருக்கிறார்களா?
தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக ஒரு கண்துடைப்பு ஆர்ப்பாட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நதிநீர்ச்சிக்கல்கள், மீத்தேன், கூடங்குளம், நியூட்ரினோ, சிக்கல்கள்- தமிழ்நாட்டுக் கல்வி உரிமைப் பறிப்பு, மருத்துவ உரிமைப் பறிப்பு, உணவு உரிமைப் பறிப்பு என எவற்றுக்காவது எதிராக, இந்திய அரசைக் கண்டித்திருக்கிறார்களா? அவர்களுக்கு நாம் அண்டைநாட்டு மக்கள் தான். தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தலையிட வேண்டியில்லாதவை தான்.
எனக்கும் அப்படித்தான், என் நாட்டுச் சிக்கல்களுக்குத் தான் நான் முதலிடம் கொடுக்க முடியும். அண்டைநாட்டுத் தமிழனின் சிக்கலுக்கு தேவைக்கும் அதிகமாக உழைத்து விட்டோம். இனியாவது நாங்கள் எங்களுக்காகப் போராடுகிறோம். ஈழம் தான் முக்கியம் என்பவர்கள் தயவுசெய்து அங்குபோய் போராடுங்கள். வாய்ப்பிருந்தால் ஐ.நா வுக்காவது சென்று போராடுங்கள். எங்கள் அரசியலை உங்களுக்காக வளைக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை: