செவ்வாய், 24 ஜூலை, 2018

மாட்டிறைச்சியை நிறுத்தும்வரை கும்பல் கொலை தொடரும்! ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்

minnambalam.com  மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் வரை கும்பல் கொலைகள் தொடரும் என ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (23.07.18) ஏஎன்ஐ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஏசுநாதர் பசு மாட்டுக் குடிலில்தான் பிறந்தார். அதனால்தான் புனிதப் பசு என்று அழைக்கிறார்கள். மெக்காவிலும் மெதினாவிலும் பசு வதை தடை செய்யப்பட்டுள்ளது. மனித குலம் இந்தப் பாவத்தை விட்டொழித்துவிட்டால் கும்பல் கொலைகளும் நின்றுவிடும்.
மாட்டிறைச்சியை நிறுத்தும்வரை கும்பல் கொலை தொடரும்!கும்பல் கொலைகள் கண்டனத்திற்குரியவை. பசு வதை என்பது பாவம் என்று மதங்களில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராஜஸ்தானில் அக்பர் கான் என்பவர் பசுப் பாதுகாவலர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: