வெள்ளி, 27 ஜூலை, 2018

கலைஞர் உமா - பிரபா போன்றவர்களை அன்று காப்பாற்றினார்.... சமுகவலையில் Flashback

Ajeevan Veer : கலைஞர் ஈழத் தமிழருக்காக அதிகம் செய்துள்ளார். அவர் அளவு
ஈழ மக்களுக்கு  நன்மை செய்தோரில்லை. கலைஞரின் அரசியல் எதிர்களின் பரப்புரைகள் அவரை பற்றி ஒரு ....  !
Radha Manohar : எப்படியாவது கலைஞர் மீது சேறு பூசிவிடவேண்டும் என்று பலர் துடிப்பது புரிகிறது, அதிலும் ஈழ புலம்பெயர்கள் துடிப்பது மிக நன்றாகவே தெரிகிறது, அடிபடையில் வெள்ளாள ஜாதி வெறியை பள்ளி சிறார்களின் நூல்களிலேயே புகுத்திய ஆறுமுக நாவலரின் மூளை கழுவலில் உருவான சமூகத்திடம் வேறு என்ன சுய புத்தியை எதிர்பார்த்து விடமுடியும்.?

எப்பொழுதும் யாரை தாக்கினால் தமக்கு எந்த காலத்திலும் எந்த பிரச்சனையும் வராது என்று நிச்சயமாக தெரிகிறதோ அவரை மிக மூர்க்கமாக தாக்கும் சந்தை கும்பல் மன நிலையை விட்டு இவர்கள் இன்னும் வெளியே வரவில்லை. அதாவது சுய சிந்தனை பெறவில்லை .
சுயசிந்தனை பெறுவதற்கு நிறைய கற்கவேண்டும் ..
 புத்தகங்கள் படிக்கவேண்டும் . வரலாறுகள் அறியவேண்டும் இவை ஒன்றும்தான் கிடையாதே?
இவர்களுக்காக நெடுமாவும் சீமானும் வைகோவும் ஆண்டன் பாலசிங்கமும் தமிழ்செல்வனும் மட்டுமே சிந்தித்தால் போதும் அவர்களின் வாந்திகளை விழுங்கியே திருப்பி கக்கி கக்கி அதுவே தற்போது பழகி விட்டது ,, கலைஞர் ஒரு பார்ப்பனராக அல்லது வெள்ளாளர் அல்லது பிரபாகரனின் கரையர் ஜாதியாக இருந்திருந்தால் நிச்சயம் இந்த கூட்டம் கலைஞரை இவ்வளவு தூரம் தூற்றி இருக்காது ..
அவர்தான் நாயனக்காரர் ஆயிற்றே ... எண்ணிக்கையில் மிக மிக சிறுபான்மை ஜாதியை சேர்ந்தவர் . அதிலும் அவர் குடும்பத்தில் தலித்துகள் நாடார் பார்பனர் என்று பலரும் திருமணம் செய்து ஜாதிய கட்டுமானத்தை தகர்க்கும் செயல் முறையை நடத்தி காட்டிவிட்டாரே?

தனது கோபாலபுரம் வீட்டை ஜாதிகள் அற்ற ஒரு சமத்துவபுரம் போலாக்கி விட்டாரே! இந்த தூற்றும் கூட்டம் பொறுக்குமா ? அவர் ஒரு சூரியன் .. இனி வரப்போகும் ஆயிரம் வருடங்களுக்கு தமிழக சரித்திரம் மட்டுமல்ல முழு இந்திய சரித்திரமும் அவர் பெயரை கூறும் .. ஆக குறைந்தது எமெர்ஜென்சியில் இருந்தாவது  ஆரம்பிக்கும் தவிர்க்கவே முடியாது..

Ajeevan Veer கலைஞர் நினைத்திருந்தால் பாண்டி பசார் பிரச்சனையோடு ஈழ பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் உமா - பிரபா போன்றவர்களை அன்று காப்பாற்றினார். அது அவர் செய்த மாபெரும் தவறு.

Annesley Ratnasingham அணைத்துக்கொண்ட தமிழ்நாட்டு மக்களையே கொலைசெய்தார்கள் , கொள்ளையடித்தார்கள் , பெண்களை ஏமாற்றினார்கள் .. ...இப்படிபடட அணைத்து போராளிகள் என்ற போர்வையில் இருந்த பயங்கரவாதிகளை தமிழ் நாட்டு மக்கள் இன்றுவரையும் அன்பாக இருக்கிறார்கள் என்றால் ??? . ..
தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் , மக்களுக்கும் முதலில் நன்றி சொல்லவேண்டும்...

கருத்துகள் இல்லை: