திங்கள், 18 ஜூன், 2018

மாவீரன் அய்யன் காளி ! கேரளாவில் வீரம் விதைக்கப்பட்ட நாள் ஜூன் 18 நினைவு நாள்.

Savitha Munuswamy : கேரளாவில் வீரம் விதைக்கப்பட்ட நாள் ஜூன் 18 மாவீரன்
அய்யன் காளி நினைவு நாள்.
கேரளத்து நாயர்களும், நம்பூதிரிகளும் பட்டியல் சமுகத்தார் கல்வி கற்க கூடாது, பொதுதெருவில் நடமாடக் கூடாது, பெண்கள் மேலாடை அணியக் கூடாது, கல்வி மறுப்பு ஆகியவற்றை கூறி அடக்குமுறையை ஏவிய இவர்களை எதிர்க்க 'அய்யன்காளிப்படை' என்ற படையை உருவாக்கி தீவிரமாக களமாடியதாலேயே..இவர் மாவீரன் என்று மக்களால் போற்றப்பட்டார்..!
பொதுதெருவில் மாட்டுவண்டி போராட்டத்தை முன்னெடுக்கிறார்..எந்த உடைகளை இம்மக்கள் அணிந்துக்கொள்ளக்கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்களான நம்பூதிரிகளும், நாயர்களும் தடைவிதித்து கூறிவந்தனரோ...அதை எதிர்த்து மாட்டின்கழுத்தில் மணி அணிவித்து வண்டி பூட்டி, அங்கவஸ்திரம் அணிந்துகொண்டு, தலைப்பாகையை கட்டிக்கொண்டு தனியாளாக one man Army ஐப்போல ஆதிக்கசாதிகள் வசிக்கும் வீதிகளில் கர்வமாக உலா வத்தவர்தான் நம் காளி...!
1904 லேயே புலையருக்காண அடிப்படை கூலி உயர்வுக்காக போராடியிருக்கிறார்..!1907 ல் புலையருக்காண பொதுக்கல்விக்காண அரசாணை உரிமையை பெற்றிருக்கிறார்..!
1916 ல் புலையருக்கு வேலைக்காண ஒதுக்கீட்டை கோரி போராடியுள்ளார்..! இதனை வலியுறுத்தவே 'சாதுஜனபரிபாலிணி' என்ற இதழை நடத்தியிருக்கிறார்...!
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இவை அதாவது 1924ல் நாராயணகுருவுடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் பங்குபெற்று 1936ல் ஆலயபிரவேச சட்டம் வெற்றி விழாவையும் கண்டவர்தான் நம் மாவீரன் அய்யன் காளி அவர்கள்...!

இத்தகைய போராளிகளின் வரலாற்றை நம் இளைய தலைமுறைகள் அறிந்துக்கொண்டு நமக்காண விடுதலைப் பாதையில் இவர்களின் அனுபவங்களை நமக்காண பாடமாக எடுத்து பயணிக்க வேண்டும்.
தோழமையுடன்
மு.சவிதா.

கருத்துகள் இல்லை: