திங்கள், 8 ஜனவரி, 2018

The casteless collective நிகழ்ச்சியில் பெரியார் பெயர் ஏன் ஒலிக்கவில்லை?

Kanimozhi MV : The casteless collective நிகழ்ச்சியில் பெரியார் பெயர் ஏன் ஒலிக்கவில்லை எனும் கேள்வி இயல்பானது , ஏனெனில் இங்கு எந்த முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பெரியார் இல்லாமல் இயங்கியது இல்லை , ஏனெனில் தமிழ்நாட்டு மண்ணில் பெரியார் பிறந்தார் , உழைத்தார் , அவரின் தத்துவம் பெரும்பான்மை மக்களின் விடுதலையை மீட்டுத்தந்தது அதனால் இந்த மண்ணில் இயங்கும் எந்த இயக்கத்திற்கும், கட்சிக்கும் பெரியார் தேவைப்பட்டார் , தேவைப்படுவார் ;நிற்க;
அப்படி இருக்கும் சூழ்நிலையில் பெரியார் பெயர் ஒலிக்காமல் தமிழ்நாட்டில் ஜாதிய தளையை உடைக்கும் நிகழ்ச்சி நடந்து இருக்கின்றது;
இதில் இரண்டு செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ;

ஒன்று ரஞ்சித் -ரஜினி கூட்டணியின் தேவை ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரவே எனும் நம் கணிப்பு சரியாகி இருக்கின்றது ;
அடுத்து பெரியாரியத் தோழர்கள் மீது தான் , அவர்கள் உழைப்பின் மீது தான் குறை என சொல்லியவர்களின் முகத்திரை கிழிந்திருக்கின்றது, அவர்களுக்கு பெரியாரே பிரச்சணை என்ற நம் கணிப்பும் சரியாகியிருக்கிறது; நிற்க
இதைத் தவிர பெரியாரின் கனவு அந்த மேடையில் நனவாகி இருக்கின்றது என்பதில் எள்ளவும் அய்யம் இல்லை ; அதை ஒவ்வொரு பெரியாரியத் தோழரும் வரவேற்கவே செய்வோம்; நிற்க

பெரியாரை ஒதுக்குவது பார்ப்பனியத்தின் சூழ்ச்சி அதை பின்பற்றும் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலை இந்த மண்ணில் காலம் புறக்கணிக்கும் , அதைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை ; நிற்க
பெரியாரைப் பற்றி பேசவில்லையே என்ற குரல்கள் இருக்கும் வரை பெரியாரியல் தொண்டர்கள் இயங்குகின்றனர் , பெரியார் என்ற தத்துவத்தின் தேவையை உணர்த்திக்கொண்டே இருப்போம் என்பதில் அய்யம் இல்லை ; நிற்க
இரண்டு தலைவர்களையும் மானுட விடுதலைக்காக போராடியத் தலைவர்கள் என ஏற்றுக் கொண்டு பயணிப்பவர்கள் ஒரு போதும் இவற்றைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை ஏனெனில் , இரண்டு தலைவர்களையும் ஏற்றுக்கொள்ள நமக்கு ஜாதி ஒரு காரணி அல்ல என்பதால் ; நிற்க
அரசியல் ஆட்டத்தில் முக்கிய திருப்பம் வரும் , சில முகமூடிகள் கிழியும்; பொறுத்திருந்து பார்ப்போம் , தமிழ்நாட்டு மண்ணில் பெரியாரின் உழைப்பு வீண்போகாமல் இருக்க போராடுவோம் !! பெரியார் பகுத்தறிவு கதிரோன், ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவன் ஒலி மறையப்போவதில்லை, வலி என்னவென்றால் மறைக்கின்ற ஆயிரம் கைகளில் அவர் உழைத்த மக்களும் உண்டு என்பதில் தான் , இது பெரியார் காலத்தில் இருந்து இருப்பது தானே ?! கடந்து செல்வோம் !!

கருத்துகள் இல்லை: