வெள்ளி, 12 ஜனவரி, 2018

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசெஞ்சே க்கு ஈகுவடார் குடியுரிமை ... லண்டன் ஐ விட்டு வெளியேறுகிறார்

லண்டன் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் அசேஞ்ச்: ஈக்வடார் குடியுரிமை வழங்கியதுதினமலர்.:குயிட்டோ: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச்க்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசேஞ்ச்,49, விக்கிலீக்ஸ் இணைய தள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 2012 -ம் ஆண்டு சுவீடனில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டதால் லண்டன் தப்பியோடினார். நாடு கடத்தி செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து வருகிறார்.
இந்நிலையில் ஈக்வடார் நாட்டு அரசு அசேஞ்சிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். மேலும் பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அசேஞ் பிரச்சனை தீர்த்து வைக்கபடுகிறது.இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசேஞ்ச் விரைவில் ஈக்வடார் செல்வார் என தெரிகிறது

கருத்துகள் இல்லை: