சனி, 9 டிசம்பர், 2017

மீனவர்களை ஏமாற்றும் அரசு – அம்பலப்படுத்தும் குமரி மாவட்ட இளைஞர்கள்!



ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்
கொந்தளிக்கும் குமரி பூத்துறை கிராம இளைஞர்கள் ! – வீடியோ</>கரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி, குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பூத்துறை கிராம இளைஞர்கள் மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு செய்யும் துரோகத்தையும். மீனவர்கள் செத்து மிதக்கும் போது ஆர்.கே. நகரில் விஷால் வேட்புமனு பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களையும் தங்களது பேச்சில் தோலுரிக்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகட்டும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகட்டும் மீனவர்களுக்கு கண்கட்டுவித்தை காட்டி வருகின்றனர். மறுபுறம் சமூக வலத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மீனவர் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலான மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர்.
மாவட்ட நிர்வாகமோ போராட்டத்தை ஒருங்கிணைத்த பாதிரியார்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, இங்கு கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது ஆகையால் போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என மறைமுகமாக மிரட்டி போராட்டத்தைத் திரும்பப்பெற வைத்துள்ளனர்.
ஆனால் இந்த தடைகளைத் தாண்டி கூடங்குளம், நெடுவாசல், மெரினா போல ஒரு மக்கள் எழுச்சியை நாங்கள் உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் ஒரு மோசடி ! – வீடியோ</ஒ கி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.
இறந்தும் உடல் கிடைக்காத மீனவர்களை காணாமல் போனவர்களாகத்தான் இந்த அரசு அறிவிக்கும். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கான மரணச்சான்றிதழை வழங்கும்.
அதுமட்டுமல்லாது தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் ஒவ்வொரு துறையிலும் மீனவர்களை இழுத்தடித்து அலைகழிப்பார்கள். ஆனால் அருகில் உள்ள கேரளாவில் ஆறுமாத காலத்தில் நிவாரணத்தை வழங்கிவிடுகின்றனர். இதுகுறித்து இளைஞர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் அதற்கு பதிலேதும் அளிக்காது சென்றுவிட்டார்.
இவ்வாறு அரசு தங்களை எப்படி தொடர்ந்து வஞ்சித்து வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினர் கிராம இளைஞர்கள்.
வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு

கருத்துகள் இல்லை: