புதன், 6 டிசம்பர், 2017

ஆளுநர் பன்வாரிலால் கன்யாகுமரிக்கு போகவில்லை ... ஆனால் நெய்வேலியில் ஆய்வாம்!

நக்கீரன் :நெல்லை மாவட்டத்தில் தூய்மை பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று நெல்லை வந்த அவர், பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர் குப்பைகளை அகற்றினார். இதில் ஆளுநருடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உடன் வந்தனர். இதற்கு முன்னர் கோவை சென்றிருந்த ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்ததற்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: