திங்கள், 11 செப்டம்பர், 2017

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை இல்லை! உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது

சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெறுகிறது. எடப்பாடி -ஓபிஎஸ் அணியின் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி தினகரன் அணியின் வெற்றிவேல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளூபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் நேரத்தை வீணடித்ததாக ஒரு லட்சம் அபராதமும் வெற்றிவேலுவுக்கு விதிக்கப்பட்டது. தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் தீர்ப்பை தள்ளிவைத்தனர். பின்னர் 9 மணீக்கு மேல் தீர்ப்பு வழங்கினர். அத்தீர்ப்பில், ‘’நாளை அதிமுக பொதுக்குழு நடத்த தடை இல்லை. பொதுக்குழுவில் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது. பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்பிற்கு கட்டுப்பட்டது’’என்று தெரிவித்தனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை: