செவ்வாய், 12 செப்டம்பர், 2017

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை... ஏனுங்க கேரளா கர்நாடகா தினம் எல்லாம் கிடையாதா?

தங்கை ராஜா: வரலாறு ரொம்ப முக்கியம் பிரதமரே. தொட்டிலாட்டும்
கலையில் டாக்டரேட் வாங்கிய உங்களை விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அண்மையில் ஏ ஆர் ரகுமான் எனும் தமிழன் நடத்திய நிகழ்ச்சியில் தமிழில் சில பாடல்களை பாடினான் என்பதற்காக நிகழ்ச்சியை புறக்கணித்ததோடு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதோடு வழக்கும் தொடர்ந்த வடமொழி வெறியர் கூட்டத்தை எந்த தேச பக்தர்களும் கண்டிக்கவில்லை. வந்தேமாதரம் பாடலை உலகளவில் கொண்டு சென்ற ஒரு தமிழனுக்கே இந்தக்கதி. வேற்றுமையில் ஒற்றுமை என்பது திணிப்பினால் வரக்கூடாது. ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதையிலும் அவரவருக்கு உள்ள உரிமையில் தலையிடாமையிலும் இருக்க வேண்டும் .
ரமேஷ் :செய்ய வேண்டிய வேலைய விட்டுப்புட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ன்னு புத்தி எப்படியெல்லாம் வேலை பாக்குது, மோடிஜி இன்னும் 20 மாதம் தான் உள்ளது அப்புறம் குஜராத் ல கூட இடம் கிடைப்பது கஷ்டம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது இதற்கு மேக் இன் தமிழ்நாடு என்று பெயர்  வைப்பீரோ
Raman தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை என்ன கேவலமான வேலையும் செய்யும் இந்த  ஜென்மம்..
Raju : வாயால வடை சுடாதீங்க மோடிஜி . காவிரியில் தண்ணிய காட்டுங்க ப்ளீஸ். 
 E.PATHMANABAN செய்ய வேண்டிய வேலைய விட்டுப்புட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ன்னு புத்தி எப்படியெல்லாம் வேலை பாக்குது, மோடிஜி இன்னும் 20 மாதம் தான் உள்ளது அப்புறம் குஜராத் ல கூட இடம் கிடைப்பது கஷ்டம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது
"வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டு மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். டில்லியில் நடந்த நிகழச்ச்யில், 'வீடியோ கான்பரஸ்' மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவர்களிடம், தமிழில் வணக்கம் கூறி, அசத்தினார் மோடி.நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பெருமை. ஆனால், அதை நாம் முறையாக கொண்டாடுகிறோமா, கடைபிடிக்கிறோமா? ஒவ்வொரு மாநிலம் குறித்தும், ஒவ்வொரு மொழி குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடைந்தால் தான், அது சாத்தியமாகும்.


தமிழ்நாடு தினத்தை ஹரியானாவிலும், பஞ்சாபில் உள்ள பள்ளி, கல்லூரியில், கேரளா தினத்தையும் ஏன் கொண்டாடக் கூடாது. அவ்வாறு அந்த மாநில நாள் கொண்டாடும்போது, அந்த மாநிலம் மற்றும் மொழியின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த நாளில், அந்தந்த மாநிலத்தின் உடையை அணிந்தும், அந்த மாநில மொழியில் பாடல் பாடியும், நடனமாடியும் கொண்டாடலாம். தமிழகம், கேரளாவில் உள்ளதுபோல், கைகளால் அரிசி சாதத்தை சாப்பிடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சினிமாவையும் பார்க்க வேண்டும்; இது முடியாத விஷயமல்ல. அனைவரும் ஒரு அடி எடுத்து வைத்தால், இது சாத்தியமே.இவ்வாறு அவர் பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: