சனி, 5 நவம்பர், 2016

வடிவேலு அதிரடி .. எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது .. நான் எப்பவுமே டாப்புதாய்ன்

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு முதலானோர் இணைந்து
நடித்துள்ள படம் கத்திசண்டை. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழால் கலந்துக்கொண்டு பேசிய வடிவேலு; நான் ஒரு ‘கேப்’புக்கு பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு எப்போதுமே கேப்பும், ஆப்பு வந்ததில்லை! நான் எப்போதுமே ‘டாப்’ தான்! என்னிடம் வந்த கதைகள் சரியில்லாத காரணத்தால் தான் எனக்கு வரும் படங்களில் நடிக்கவில்லை.
ஆனால் எந்த பேப்பர், வாட்ஸ்-அப், டிவி சேனல் எடுத்தாலும் நான் தான் கார்ட்டூன் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட நான் தான் காமெடியன்! இதற்கு என்னுடைய உழைப்புதான் காரனம். 24 மணிநேரமும் நான் சினிமாவை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். ‘கத்திசண்டை’ என்றதும் இது கத்தியால் சண்டை போடும் படம் என்று யாரும் நினைத்து விடவேண்டாம்! இது புத்தியால் சண்டை போடும் படம். இதில் நான் ஒரு டுபாகூர் டாக்டராக நடிக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ கூடிய ஒரு படமாக இருக்கும். இது எல்லோருக்கும் சரியான ஒரு காமெடி படமாக இருக்கும்’’ என்றார் வடிவேலு! நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: