
இந்த தாக்குதலில் கத்துவா மாவட்டத்தில் இருந்து பூஞ்ச் வரை சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டு கோடு வரை 314 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், ‘‘அதிகமான ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லை அருகில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தற்காலிக முகாமிற்கு அழைத்து வரப்படுகின்றனர். மாவட்ட அரசு மருத்துவமனை, துணை மாவட்ட மருத்துவமனை, சமூக நலக்கூடம் போன்றவற்றில் 24 மணி நேர சுகாதார சேவைகள் தயார் நிலையில் உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் 18 பேர் பலியாகியுள்ளனர். அதில் 12 பேர் பொதுமக்கள் ஆவார்கள். அத்துடன் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தினத்தந்தி,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக