புதன், 31 ஆகஸ்ட், 2016

பச்சமுத்து தொடக்கத்தில் இருந்தே மோசடிகள் மூலம்தான் வளர்ந்தார்!

எஸ் ஆர் எம் பச்சைமுத்து...இதுவரை உத்தமரா புத்தரா ஏசுவா இருந்தது போலவும் இப்போதான் கிரிமினல் குற்றங்கள் செய்ததை போலவும் ...தமிழக கட்சிகளும் காவல் துறையும் ...பெரிய ஸீன் போடறாங்க..
தொடக்கத்திலிருந்தே...பச்சமுத்து அடுக்கடுக்காக செய்து வந்த மோசடிகள்...குற்றங்கள் எல்லாம் காவல் துறைக்கும் ...காவல்துறை மூலமாக ஆளும்கட்சிகளுக்கும் தகவல்கள் வந்துகொண்டே இருந்தன...
மாதம் தவறாமல் பத்திரிகை நிருபர்களுக்கம் ...காவல்துறையினருக்கும் ஆளும் கட்சிக்கும் லஞ்சமும் பங்குத்தொகையும் வந்துகொண்டுதான் இருந்தது...பாச்சமுத்துவின் கிரிமினல் அராஜகங்கள் ஊரறிந்த ரகசியம்....சரி போனது போகட்டும்...

இப்போது...காவல் துறை அவரை முறையாக விசாரித்து குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க போகிறதா ??...இல்லையே...
அப்படியே காவல்துறை நிரூபித்தாலும் நீதிமன்றம் அவரை தண்டிக்க போகிறதா ?...இல்லையே...
ஜெயாவின் வழக்குகளில் வந்த தீர்ப்புகள் அடிப்படையில் பச்சமுத்து விடுதலை செய்யப்படுவார்...அவர் வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராகவோ பிரதமராகவோ வரட்டும்
இப்போது நடப்பதெல்லாம் நடிப்பு...மக்களை ஏமாற்றும் நாடகம் ..
அப்புறம் எதுக்கு இந்த கைது விசாரணை எல்லாம்...மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது..
பச்சமுத்துவை நீங்களே விட்டுவிடுங்கள் ...
25 லட்சம் கோடிக்கு அதிபதியை தண்டிப்பது மனு தர்மத்துக்கு அடுக்குமா ? பச்சமுத்துவை தண்டித்தால்...நீதிபதிகளுக்கு அவர்கள் மனசாட்சியே உறுத்துமே...
நம் நாட்டில் ஏழைகள் தான் தண்டிக்கப்படுவார்கள்
அரசியல் வாதிகள் உயர் அதிகாரிகள் சினிமா காரர்கள் பணக்காரர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியா ஒரு வினோதமான நாடு.
முகநூல் பதிவு Damodaran Chennai

கருத்துகள் இல்லை: