வெள்ளி, 7 நவம்பர், 2014

நடிகை ஷ்ரேயா தனது ஒவிங்களை ஏலத்தில் விடப்போகிறார்,

நடிகை ஸ்ரேயா தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு நிதி திரட்ட உள்ளார். ஸ்ரேயாவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. சிறு வயதில் இருந்தே ஏராளமான ஓவியங்கள் வரைந்து வீட்டில் வைத்துள்ளார். குறிப்பாக பள்ளியில் படித்தபோது நிறைய ஓவியங்கள் வரைந்துள்ளார். தான் வரைந்துள்ள பகவான் கிருஷ்ணன் மற்றும் புத்தர் ஓவியங்களை ஏலம் விட ஸ்ரேயா திட்டமிட்டுள்ளார். இந்த ஏலம் மூலம் திரட்டும் தொகையை விசாகப்பட்டினம் புயல் பாதிப்பு நிதிக்கு வழங்கப் போகிறாராம். மற்ற ஓவியங்களையும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் நிதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: