திங்கள், 3 நவம்பர், 2014

மனைவி உடந்தையுடன் 59 பெண்களை கற்பழித்த கனடா வாலிபர்

Anieph Fitzroy Burton and Jehanneiry Beaton கனடாவில் டொரோண்டோ நகருக்கு அண்மையில் உள்ள  எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை கற்பழித்து வந்தார். இதுபோல் 59 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அனிட்பிட்ரோ (வயது 32) என்பவரை கைது செய்தனர். இந்த கற்பழிப்புக்கு அவரது மனைவி ஜெகனாரி உடந்தையாக இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார்.

அனிட்பிட்ரோ மீது 99 பிரிவுகளிலும், உடந்தையாக இருந்த மனைவி ஜெகனாரி மீது 6 பிரிவிகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கற்பழிப்பு குறித்து அனிட்பிட்ரோ கூறும்போது, அதிகாலை நேரத்தில் பெண்கள் அயர்ந்து தூங்குவார்கள். இதுதான் சரியான நேரம் என கருதி அந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து அவர்களை கற்பழித்தேன். எனது குற்றங்கள் அனைத்திற்கும் எனது மனைவி உடந்தையாக இருந்தார் என்று கூறினார்maalaimalar.com

கருத்துகள் இல்லை: