திங்கள், 3 நவம்பர், 2014

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா நிருபரிடம் படு மோசமாக நடந்துகொண்டார்!



ராபர்ட் வதேரா தொலைக்காட்சி நிருபரிடம் கடுமையாக நடந்து கொண்ட செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ரூ.44 கோடி ஆதாயம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு qஇருந்தபோது சிகோபூர், குர்கான் ஆகிய நகரங்களில் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கிய அவர் அதே நிலங்களை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு 58 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது.
இதன் மூலம் வதேரா ரூ.44 கோடி அளவிற்கு ஆதாயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் அரியானாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநில பா.ஜனதா அரசு அறிவித்தது. வதேரா ஆவேசம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி அசோகா ஓட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராபர்ட் வதேரா கலந்து கொண்டார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மைக்கை வதேரா முன்பாக நீட்டி நில விவகாரம் குறித்து அவரிடம் கேள்வியை எழுப்பினார். இதனால் ஆவேசம் அடைந்த வதேரா, இது தீவிரமான பிரச்சினையா? என்று 3 முறை தொடர்ந்து கேட்டார். மேலும் நீங்கள் என்ன பைத்தியமா? உங்களுக்கு என்ன ஆயிற்று? என்றும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். அப்போது தொலைக்காட்சி நிருபர் வைத்திருந்த மைக்கை வதேரா கோபத்துடன் தட்டி விட்டார். கட்சிகள் கண்டனம் ராபர்ட் வதேராவின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இது பற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா கூறுகையில், பிரபலமான மனிதர் ஒருவர் இதுபோன்று நடந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று என்றார். பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, வதேராவின் இந்த செயலுக்காக அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று கூறினார். தேசிய வாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மஜித் மேன் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக நாட்டில் கடினமான கேள்விகளை எதிர்நோக்கும்போது அரசியல்வாதிகள் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டார். சாதாரண சம்பவம் ஆனால், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிடுகையில் ‘‘இது ஒரு சாதாரண சம்பவம். இதனை ஊடகங்கள்தான் பெரிது படுத்துகின்றன. நாட்டின் தனிப்பட்ட ஒரு பிரஜையை தேவையின்றி இதுபோல் ஏன் ஊடகங்கள் தொல்லை கொடுக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வதேரா விதிகளை மீறி இருந்தால் அவர் மீது வழக்கு தொடருங்கள். முறையற்ற வகையில் சொத்து சேர்த்து இருந்தால் அவற்றை பறிமுதல் செய்யுங்கள். அதற்காக ஊடகங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது’’ என்று தெரிவித்தார். சட்டம் கடமையை செய்யும் பா.ஜனதா தலைவர் சேஷாத்ரி சாரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒருவேளை இந்த பிரச்சினையை மாநில அரசு தீவிரமாக கருதாது என்று வதேரா நினைத்தாரோ, என்னவோ?. ஆனால், மத்திய அரசும், அரியானா மாநில அரசும் இந்த நில முறைகேடு விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்’’ என்று குறிப்பிட்டார். அரியானா முதல்– மந்திரி மனோகர் லால் கட்டார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இந்த விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார். நிருபர் என்று தெரியாது நடந்த சம்பவம் குறித்து, வதேரா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அங்கே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே கருதினேன். அதனால் அவர் தொலைக்காட்சி நிருபர் என்பதும் எனக்குத் தெரியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. dailythanthi.in

கருத்துகள் இல்லை: