திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தெரு தெருவாக பொருட்கள் விற்றவள் ! அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம் : எல்லாம் மோடிதாய்ன் !

புதுடில்லி:''டில்லி நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான், இப்போது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இந்த பெருமை, பிரதமர் மோடி எனக்கு தந்தது,'' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
டிலலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:என் வாழ்க்கையில் முக்கியமான தருணம், பிரதமர் மோடி என்னை, 'இளைய சகோதரி' என அழைத்தது தான். அதை நினைத்தால், இப்போதும் எனக்கு கண்ணில் நீர் வழியும்; தொண்டை அடைத்துக் கொள்ளும்.நான் சிறு வயதில், டில்லி நகர வீதிகளில், வீடுவீடாக அழகு சாதன பொருட்களை விற்பனை செய்துள்ளேன். என் தாய், டில்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில், 'ஹவுஸ் கீப்பிங்' எனப்படும், சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை வகித்து உள்ளார்.

என்ன செய்வது? தெரு தெருவாக விற்றீகள் சரி....ஆனாலும் அதே சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ஒழுக்கமாக இருந்து படித்து தன் உழைப்பின் மூலம் முன்னேறிய எவ்வளவோ பேர் இன்று இந்தியாவில் இருந்து வெளியேறி போக வேண்டிய நிலையில் உள்ளார்கள்....இதற்கு எல்லாம் காரணம் உழைப்பிற்கும் திறமைக்கும் மக்கள் ஒட்டு போட்டதே கிடையாது....உணர்ச்சிக்கு அடிமையாகி ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் சாமியாரின் பக்தர்களாகவும் உள்ளார்கள். MGR காலத்தில் கழுதை நின்றால் கூட ஜெயிக்கும் என்பார்கள்...அந்த அளவு மூடநம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. இதில் நீங்கள் பாரத ரத்னா பெற்றால் கூட வியப்பில்லை.
நான், டில்லி, ஆர்.கே.நகர் கூரைப் பள்ளி யில் தான் படித்தேன்.
என் தாய் எந்த ஓட்டலில் வேலை பார்த்தாரோ, அந்த ஓட்ட லின் எதிரே பிரமாண்ட பங்களாவில் இப்போது நான் வசிக்கிறேன். இதெல்லாம், என்னை இளைய சகோதரியாக ஏற்று கொண்ட பிரதமர் மோடி வழங்கியவை.என் முந்தைய பணிகளைப் பார்த்து, அமைச்சர் பதவியை மோடி வழங்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கியுள்ளார்.
தரையை பெருக்கச் சொன்னாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். பிரதமர் மோடி எனக்கு வழங்கியுள்ள இந்த பொறுப்பை நான் எந்த அளவுக்கு சிறப்பாக செய்துள்ளேன் என்பது போகப் போக அனைவரும் அறிந்து கொள்வர்.இவ்வாறு அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: