வியாழன், 4 ஜூலை, 2013

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த Douglas Engelbart காலமானார்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி டக்லஸ் எங்கெல்பர்ட்(88). 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார்.
இதனால் கம்ப்யூட்டரின் பயன்பாடு சாதாரண மக்களிடமும் பிரபலமானது. கம்ப்யூட்டரில் மவுஸ் தற்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது.
டக்லஸ் எங்கெல்பர்ட், அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் நீண்ட காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (04.07.2013) அதிகாலை அவர் உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணடைந்தார்

கருத்துகள் இல்லை: