வியாழன், 4 ஜூலை, 2013

கேளம்பாக்கம் பண்ணைவீட்டு கொலையில் திருப்பம் காதலனே கழுத்தை இறுக்கி கொன்றான்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதிருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே பண்ணை வீட்டில் இளம்பெண் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தால் காதலியை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.சென்னை தி.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). பெரிய ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் கார்டன் அமைத்து கொடுக்கும் வேலை செய்கிறார். இதற்காக கேளம்பாக்கம் அருகே வெளிச்சை கிராமத்தில் 40 ஏக்கரில் பண்ணை வைத்து, பலவிதமான பூச்செடிகளை வளர்த்து வருகிறார். பண்ணையில் உள்ள வீட்டிலேயே மனைவி சுகுணாவுடன் வசிக்கிறார். வெளிச்சை மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 15&க்கும் மேற்பட்டோர் பண்ணை வேலைக்கு தினமும் வந்து செல்வர். சுகுணாவுக்கு உதவியாக புதுக்கோட்டை அருகே போச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா மகள் செல்வநாயகி (18), ஓராண்டாக வேலை செய்து வந்தார்.


 நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறத்தில் செல்வநாயகி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பண்ணை  தொழிலாளிகளிடம் விசாரித்தனர். தையூர் ஏரி எதிர்வாயல் பகுதியை சேர்ந்த பிளம்பர் கண்ணன் (32) மீது சந்தேகம் வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, செல்வநாயகியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பண்ணை வீட்டு வேலைக்கு வந்து சென்றபோது செல்வநாயகியுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். பண்ணையில் வேலைபார்க்கும் எல்லாரிடமும் செல்வநாயகி சகஜமாக பழகி உள்ளார். மற்ற ஆண்களிடம் அவர் சிரித்து பேசுவது கண்ணனுக்கு பிடிக்கவில்லை. இதனால் யாரிடமும் பேசக்கூடாது என்று செல்வநாயகிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். ‘காதலிக்கும்போதே என் மீது சந்தேகப்படுகிறாயே, உன்னை எப்படி திருமணம் செய்து கொள்வது’ என்று கூறிய செல்வநாயகி, கண்ணனிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து வந்தார்.

இந்நிலையில் வீட்டு செலவுக்கு அனுப்ப ரூ.2 ஆயிரம் தேவைப்பட்டதால் கண்ணனிடம் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பணம் கொடுக்க பண்ணை வீட்டுக்கு கண்ணன் வந்துள்ளார். அப்போது     நாய்க்கு சாப்பாடு வைக்க செல்வநாயகி வெளியே வந்துள்ளார். இருவரும் வீட்டின் பின்புறம் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், செல்வநாயகியின் வாயை பொத்தி, தோளில் போட்டிருந்த துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைதான பிளம்பர் கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: