வெள்ளி, 5 ஜூலை, 2013

அத்வானி: ஆர்.எஸ்.எஸ்., காட்டும் வழியில் பணியாற்றுவோம்

நாக்பூர்: பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,சும் இணைந்து செயலாற்றும் இது மிக
ஆழமான உறவு கொண்டது என பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.,அத்வானி கூறியுள்ளார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் ஆர். எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்தை சந்தித்து பேசினார்.
இவரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானி; இன்றைய பேச்சு திருப்தியாக அமைந்தது. இதில் எதிர்கால சட்டசபை மற்றும் பார்லி., தேர்தல் பணி குறித்தும், சமீபத்திய அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்தோம். பா.ஜ.,வும், ஆர். எஸ்.எஸ்., சும் மிக நெருக்கமான உறவு கொண்டது. இது மிக ஆழானது. இந்த இயக்கத்தில் நான் எனது 14 வயது முதல் இணைந்து செயல்பட்டு வருகிறேன். வரவிருக்கும் 2014 லோக்சபா தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., காட்டும் வழியில் பணியாற்றுவோம் . இவ்வாறு அவர் கூறினார்.


குஜராத் முதல்வர் மோடிக்கு தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டதில் இருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் கட்சி நிர்வாகிகள் சமரசத்திற்கு பின்னர் ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி . இது வரை இவர் மீடியாவிடம் எதுவும் பேசாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அத்வானி நிருபர்களிடம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: