வெள்ளி, 5 ஜூலை, 2013

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் இருந்து உத்தரகாண்டுக்கு 50 லட்சத்தை தாரை வார்த்தார் ! சுமங்கலி கேபிள் அங்கும் போகுமோ ?

சென்னை:உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ^50 லட்சம் நிதி வழங்கினார்.உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்கு நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பணிகளுக்காக எம்.பி.க்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தருமாறு மத்திய அரசு அனைத்து எம்.பி.க்களுக் கும் கடிதம் அனுப்பியது.இதற்கிடையில், திமுக எம்பிக்கள் அனைவரும் ஏற்கனவே தங்களது ஒரு மாத சம்பளத்தை கருணாநிதியிடம் வழங்கினர். அந்த நிதி மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.இந்தநிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தனது மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சத்தை ஒதுக்கி உத்தரகாண்ட் மாநில மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வழங்கினார்.

கருத்துகள் இல்லை: