சனி, 6 ஜூலை, 2013

தர்மபுரி எஸ்பியிடம் திவ்யா மற்றும் தாயாரை ஒப்படைத்தது பாமக! அவர்கள் பாமக கட்டுப்பாட்டில் உள்ளது நிருபணம்

சென்னை: இளவரசன் மனைவி திவ்யாவையும் அவர் தாயாரையும் தர்மபுரி மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்கிடம் ஒப்படைத்தனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசனிடம் இருந்து அண்மையில் பிரிந்து சென்றார் திவ்யா. "இனி ஒருபோதும் இளவசரனுடன் சேரமாட்டேன்," என்று அவரை கூற வைத்து, இளவரசன் மர்மமான முறையில் மரணிக்க காரணமாக இருந்தன சில சமூக விரோத சக்திகள். திவ்யா இப்படி சொன்ன அடித்த நாளே காதல் கணவர் இளவரசனின் உடல் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளவரசனின் மரணம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி பெற்றோர், உறவினர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், திவ்யா, அவரது தாயாருக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்ற (5ஆம் தேதி) உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, திவ்யாவையும், அவரது தாயார் அம்சவேணியையும் பா.ம.க.வினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் இன்று (6ஆம் தேதி) ஒப்படைத்துள்ளனர். இனி திவ்யாவை பாதுகாப்பது காவல்துறையின் கடமை என்றும் கூறியுள்ளனர்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: