சனி, 6 ஜூலை, 2013

வேலூர் மருத்துவ மாணவி பவித்ரா கீழே குதித்து தற்கொலை அல்லது கொலை ?

வேலூர் தொரப்பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் பாலு (40). இவரது மகள் பவித்ரா(19) வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம் 2 மணியளவில் கல்லூரி விடுதியின் 7-வது மாடிக்கு சென்ற அவர் திடீரென மேலே இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த பவித்ராவை ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து வேலூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எல்லா செய்திகளும் பிரபல மருத்துவ கல்லூரி என்றே குறிப்பிடுகின்றன , அந்த பிரபல கல்லூரியின் பெயர் என்னவென்று தெரிந்தால் சொல்லுங்களேன் , பணம் பத்தும் செய்யும்

கருத்துகள் இல்லை: