திங்கள், 2 ஏப்ரல், 2012

உல்லாச ஒசாமாவின் 3 மனைவிகளுக்கு 45 நாள் சிறை !


இஸ்லாமாபாத்: நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகுந்து குடியேறிய குற்றத்திற்காக மறைந்த பயங்கராவாதி ஒசாமாவின் 3 மனைவிள் மற்றும் 2 குழந்தைகளுக்கு 45 நாள் சிறைத்தண்டனை விதித்து பாக்., கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த குற்றத்தின் படி 3 மனைவிகள் , 2 பெண்குழந்தைகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். எனவே இன்னும் 2 வாரம் மட்டுமே சிறையில் இருக்க வேண்டியது இருக்கும் என ஒசாமாவின் வக்கீல் முகம்மது ஆமீர் தெரிவித்தார் .
இவர்களது சிறைக்காலம் முடிந்ததும் விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் உள்துறை அமைச்சகத்திற்கும் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒசாமாவின் ஏனைய 2 மனைவிகள் சவுதியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: