புதன், 7 டிசம்பர், 2011

காசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. அரசு முடிவு!

சென்னை: நிதித் தட்டுப்பாட்டைக் காரணமாகச் சொல்லி இந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு மக்களுக்கு இலவசப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாது என்று தெரிகிறது.
தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கடந்த திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு முதல் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசி பருப்பு 100 கிராம் மற்றும் முந்திரி-திராட்சை 20 கிராம் அடங்கிய பைகள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. (இந்தப் பொருட்கள் அடங்கிய பைகளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் படமும் அச்சிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.)
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டது. பின்னர் விலைவாசியும் உயர, 2011ம் ஆண்டில் இத் திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவானது.
இந் நிலையில் ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, மாநிலம் கடும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி சமீபத்தில் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியது. மின் கட்டணத்தையும் உயர்த்தவுள்ளது.

இதே நிதித் தட்டுப்பாட்டை காரணமாகச் சொல்லி, மக்களுக்கு இந்த முறை பொங்கல் இலவச பொருள்களை வழங்குவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி வரை செலவாகலாம் என்பதை, அதைத் தவிர்க்க அரசு முடிவு செய்துள்ளதாம்

கருத்துகள் இல்லை: