திங்கள், 5 டிசம்பர், 2011

முல்லைப்பெரியாறு நீதிபதி ஆனந்துக்கு கலைஞர் கடிதம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் ஐவர் குழுவின் தலைவர் நீதிபதி ஆனந்துக்கு தி.மு.க., தலைவர் கலைஞர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், அணையின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணத்தை காட்டி 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் பீதியை கிளம்பும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும்’’ என்றும் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை: