வியாழன், 8 டிசம்பர், 2011

காமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி!

சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா
 விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு மாட்டிகிணு சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
அம்மணக்காரன் ஊருல கோவணன் கட்டுனவன் டீஜன்டுனா, போலீசு லத்திய  பாத்தாலே மூச்சா போறவன் ஊர்ல, கம்பு கட்டி துணி காயப்போடுறவன் கொம்பனா?
வேல வெட்டி இல்லாத புயபுள்ளகளுட்ட 1000, 2000ம்னு வாங்கி கடவுள காட்டுவேன்னு வடிவேலு அண்ணன் வசூல் பண்ண கத தெரியுமாலே? பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே! கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க! அப்போ நம்ம அண்ணாத்தே ஒன்னு அடிச்சு விடுவாறு, யாரு பொண்டாட்டிங்கல்லாம் பத்தினியோ அவுகளுக்கு மட்டும் கடவுள் தெரிவாருன்னு சொன்னப்புறம், அவனவன் துண்டக் காணோம் துப்பட்டாவக் காணோம்னு கன்னத்தில் போட்டுக்கினு மானத்தை பாத்து சாமி தெரியுதுன்னு உருகுவானுக!
அப்படித்தாம்லே இந்த சாநிய (சாரு நிவேதிதா) நம்ம பதிவுலகத்துல இருக்குற சில பயலுவ அதுவும் சேட்டு பையனுகிட்ட ஐஞ்சு பானி பூரியை முழுங்கினு நாலுதான் லபக்குனேன்னு சண்டை போடுற காலரைக்கால் டிக்கட்டுங்க கொண்டாடுறானுவ! சாமிய பாக்கலேன்னா சொன்னா கற்பு காத்துல கரைஞ்சிரும்ங்கிற மேறி என்னா ஒரு பக்தி!

ஏலேய் மளிகை லிஸ்ட் போட்டாலும், மங்காத்தா டிக்கெட்டு புக் பண்ணினாலும் புள்ளையார் சுளி போட்டு ஆரம்பிக்கிறதுதான் நம்ம மரபுலே! அதுமேறி இலக்கியக் கட்டுரைன்னா நம்ம குருஜி இல்லாமலாடே! மொகரம் பண்டிகைக்கு ஆபிசுல லீவு, அம்பத்தூர்ல இருந்து வர பேஜாரா இருக்கும்ணு குருஜி இந்த பங்ஷனுக்கு வரலேன்னு சொன்னதுமே நமக்கு கொஞ்சம் டல்லுதான். என்ன இருந்தாலும் பதிவுலகுல சாநிய ராக்ஸோ ராக்குஸூன்னு எழுதி நம்ம பயலுகள பத்தி விட்டவராச்சே! அதுவும் போன தபா குஷ்பு வரலேன்னு துக்கத்துல இருந்தவருகிட்ட, இந்த வாட்டி ஜோதிர்மயி வருவாக வாங்கப்புன்னு துக்கம் விசாரிச்சாரு நம்ம ராம்ஜி யாஹூ.
ராம்ஜி யாருடே புதுசுன்னு வாயப்பெளக்காதீக. அவுரு அதுக்கு ஒர்த்தான ஆளு! கடவுள்னா தூணுல, துரும்புல, இருப்புல, மப்புல இருப்பான்ங்குற மேறி, இலக்கியம்னா அது ராஜேஷ் குமார் பாக்கெட் நாவல்லயும் இருக்கும், ஜெயமோகனது தண்டியான விஷ்ணுபுரத்துலயும் இருக்கும்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டு அந்த அதிர்ச்சியில சுயமோகத்துக்கு கிடைச்ச அடியில ஜெயமோகானந்தா பின்னூட்ட பெட்டியை தூக்கிட்டாருல்ல! இவருதாம்லே பதிவுலக பின்னூட்ட பில்லா!
சீரோ டிகிரியையே கொஞ்சம், நஞ்சமாக மாத்தி மாத்தி தேகம், எக்சைல்னு காத்தால வெடிக்கிற அடிவயத்து கேசு மாதிரி ரிலீஸ் பண்றாரு சாநின்னு குருஜிக்கு தெரிஞ்சாலும் அதே நாத்தத்தை மொகத்தை சிரிச்சாப்புல வச்சிகிட்டு சுவாரசியமா புடிக்கிறாரு. அந்த பீலிங்லதானோ என்னவோ மாலையோரத்து மப்புக்கு குட்டி உருளைக்கிழங்கு ரோஸ்ட், பால்கனி கட்டிங்குல தேன்கனி மூன் ரெய்சிங்கினு எழுதி இம்சிக்கிறாரு? பெறவு நம்மளோட சேந்தா வாழ்க்கையில இருந்து இலக்கியத்தை கண்டுபிடிக்கலாம், சாநியோட சேந்தா அது கட்டிங்கை வுட்டு நகறாது! விடுலே, என்ன இருந்தாலும் மொகரத்துக்கு ஆபிசை லீவுன்னு வுட்டுறுக்காறு, அந்த பாய்மாபிமானாத்துக்கு மட்டும் ஒரு நன்னிய சொல்லிக்கினு மேட்டருக்கு வருவோம்.
குருஜியும் வரல, ராம்ஜியும் வரலயேன்னு போகலாமானு ரோசிச்சிப்ப நம்ம கூட்டுக்காரன், சும்மா டைம் பாசுக்கு போலாம்டேன்னு இழுத்தான். சரி மக்கான்னு சொல்லி வெச்சேன்.
அடியில வெட்டாகுதான்னு பொறுக்கி சாநி சாட் ஸ்கேண்டல் வெளியான பிறகு நடக்குற புக் பங்ஷன்ங்குறதுனால மட்டும் நான் அங்க போகல! சாநியோட ஜால்ராக் கூட்டம் எத்தன பேரு வருவானுக, அதுல எத்தன பேரு வூட்டுக்காரிகளை கூட்டிட்டு வருவானுக, அதுல எத்தனை பேரு வூட்டம்மாக்கள சாநிகிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணுவானுகன்னு ஒரு கணக்கு போடலாம்னு பாத்தா, ஏலே சொன்னா டெரரா இருக்கும், எல்லா பயலும் உசார்டே, ஒருத்தனும் கூட்டிட்டு வரல, ஒன்னு இரண்டுன்னு கூட்டிட்டு வந்தவனுகளும் ஏதோ சில ஐயோ பாவம் கேசு! அதுவும் அந்த சாட் மேட்டரு தெரியாத அப்பாவி பயலுவ!
ஆறு மணி பங்சன்னு சொன்னாப்லயா.. எதுக்கும் ஒரு அஞ்சரைக்கே போலாமேன்னு போய் பாத்தா சுத்துவட்டாரத்துல ஒரு குஞ்சு குளுவானக் கூட காணோம். என்னடா இது காமராசருன்னு சொன்னாப்லயா ராமராசருன்னு சொன்னாப்லயான்னு ஒரே சம்சயமாப் போச்சுங்க.
உள்ளுக்குள்ள போனா மண்டவத்துக்குள்ள நொழஞ்சதுமே லெப்ட் சைடுல நம்ம கெழக்கு கம்பேனிக்காரங்க அந்த புக்கை லோடு லோடா எறக்கி  அடுக்கி வச்சிருந்தாங்க. எண்ணிப்பாக்கல. எப்புடியும் ஒரு ஆயிரங்காப்பி அடிச்சிருப்பாகன்னு தெரிஞ்சுது. அல்லாத்தையும் வுத்துப்புடனும்னு ஒரு லச்சிய வெறிய கிழக்கு தம்பிமாருங்கிட்ட பாத்தேணுங்க! அடோ சாமீ… நம்மூர்ல இத்தினி படிப்பாளிங்களான்னு பக்குன்னு ஆயிருச்சு. அனேகமா இன்னிக்கு டாஸ்மாக்குல யாவாரம் படுத்திருக்கும்னு சாநிய பத்தி நெனச்சிட்டே மண்டவத்துக் கதவத் தொறந்தா திரும்பவும் பக்குன்னு ஆயிருச்சு. பின்ன அத்தினி பெரிய மண்டவத்துக்குள்ள எண்ணி பத்தே பேருன்னா எப்புடி இருக்கும்? எனக்கென்னவோ பேய் பங்களாவுக்குள்ள பூந்துட்ட மாதிரியே இருந்துச்சு.
முப்பாத்தம்மன நெனச்சிட்டே ஒரு ஓரமா போய் உக்காந்தேன். அப்புறம் ஒவ்வொருத்தரா வந்தாங்க. ஒருவழியா பங்சனு ஆறரைக்குத் தொடங்கிச்சு, நம்ம கூட்டுக்காரணும் வந்தாச்சு!
எங்கள மேறி பந்திக்கு முந்துன கேசுகளை குஜாலாக்குற படி கொலைவெறி, இச்சு இச்சு குத்துப்பாட்டைப் போட்டு தாளிச்சாணுக! இந்தபடிக்கு போனா அடுத்த தபா ரிக்கார்டு டான்ஸ் நிச்சயம். அதுக்கு கூட்டம் வருங்குறதும் சத்தியம். இதெல்லாம் யூத்தா காட்டிக்கிறதுக்காவாம்! ஏலே போக்கத்தனுவுகளா அதுல என்ன யூத்து, இன்னம் பேபி யூத்துக்கு போகணும்மான டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் போடலாம்லே, போட்டா அல்லாரும் பால்குடிக்கிற பாப்பான்னு காட்டலாம்லா? இந்த டைமுல பதிவுலகத்தின் யூத் கேபிள் சங்கர் உள்ளேன் ஐயான்னு ஆஜர் வைச்சாரு. இந்த யூத் அக்கப்போருங்கள பாத்தா கே.பி.சுந்தராம்பாள் மேறி நாமளும் கிழடுதட்டி வரம் வாங்கிட்டு போறது மேல்!
மேடையில மூணு நாக்காலிங்கள போட்டுருந்தானுவ. அதுல ஆர்டர் படி சாநி, இந்திரா பார்த்தசாரதி, வாலி மூம்மூர்த்தி மேறி குந்திக்கினாங்க.அல்லாம் 60, 70, 80வயசு கேசுங்க. அதைப்பாத்தா நாகேஸ்வரராவ் பூங்காவுல கிழடு கெட்டைங்கல்லாம் நடந்த டயர்டுல அங்ககீற பெஞ்சுல குந்துண மாதிரி ஒரு காட்சி. இவுகதான் யூத்துக்கு அத்தாரிட்டின்னா அது சிம்புவோட தம்பி குறளரசனுக்கே அடுக்காதுடே.
பங்சன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஜிகு ஜிகு சட்டையில் சாநி அங்கன இங்கன நடந்து, போஸ் கொடுத்து, கை குலுக்கி, சிரிச்சிகிணு உலா வந்தாரு. இதைப்பாத்தா தஞ்சாவூர் பெரிய கோவில் ஆனை அம்மாம் பெரிய கோவிலுல நின்னுக்கிணு வர பக்தமாருங்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் கொடுத்து தும்பிக்கையில தட்சிணையை அமுக்கின மாறி இருந்துச்சு. அம்மாம் பெரிய ஹாலுல கால்வாசி கூட ரொம்பாத கூட்டத்துல என்னா ஒரு எஃபக்ட்டு!
சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா
இதுல சாநி சட்டைக் கலருக்கு செமத்தியா டஃப் கொடுக்குற மேரி மச்சி சார் கண்ணைப்பறிக்கிற பச்சை டீ சர்ட்டுல சும்மா அந்தக்காலத்து ராமராஜன் மேறி என்ட்ரி குட்தாரு. அவரைப்பத்தித்தான் எக்சைலு நாவலோட 323ம் பக்கம் வருதுன்னு நம்ம கூட்டுக்காரன் அந்த புக்கை புரட்டி காண்பிச்சான். இந்த உலகத்துல பலரும் ரசிக்கிற மாதிரி நாமளும் ஒரு துணை நடிகன் கணக்கா இருக்கோம்ங்குற ஆனந்தத்துல அவரும் இதெல்லாம் ஒண்ணுமில்லைனு போகலாம். இருந்தாலும் நமக்குத்தான் மனசு திக்கு திக்குனு அடிக்குது. யாரு பெத்த புள்ளையோ பாவம்!

பெறவு எல்லாரும் செட்டானதும், “‘அஜால் குஜால் பாட்டெழுதும் வாலிப கவிஞர் வாலி வந்திருக்காக, மார்கெட் போன சமஸ்கிருத வித்துவான் இ.பா. வந்திருக்காக, குண்டூசி முதல் கிசுகிசு வரை அல்லாத்தையும் புக் போடும் கார்ப்பரேட் பதிப்பாளர் பத்ரி வந்திருக்காக, மற்றுமுள்ள வாலிப – வயோதிக நண்பர்கள் எல்லாம் வந்திருக்காக… வாம்மா மின்னல்…’ என சாநி சொம்பு தூக்கி வட்டத்துக்காரனுக குரல் எழுப்பனதும் கோட் – சூட்டுல சாநியை கையப்பிடிச்சு ஒருத்தரு அவரும் சூட்டு கோட்டு போட்டுகிணு இருந்தவரு கூட்டிட்டு வந்தாரு. கூட்டிட்டு வந்தவரு கலருல கருப்புங்கிறதானலயோ என்னமோ அவரு கோட்டு சூட்டு போட்டதை ஒத்துக்கிறதுக்கு முடியலடே. நம்மள மேறி உள்ள கருப்புதமிழனுக்கு கோட்டு சூட்டு எப்புடிலே ஒத்துக்கும்?
இதுல அவருதான் சாநிக்கு டை கட்டி விட்டாருன்னு சாநியே மேடையில சொன்னப்போ உண்மையிலேயே புல் அரிச்சிருச்சு. இதுல இன்னோரு ஃபுல்லையும் கேளுடே, மேடைக்கு வந்தவுக அல்லாத்தையும் சாநி சொம்பு தூக்கி காரனுவக கைத்தாங்கலாத்தான் கூட்டிகிணு வந்தானுக, அட ஙொக்கமக்கா என்னா ஒரு ‘யூத்’தாபிமானம்!
அமெரிக்கன் ஜாக்கிக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுன இந்த சாநி இன்னைக்கு வாடகைக்கு எடுத்த கோட்டு சூட்டு போட்டது எதுக்காம்? ரசியல் கல்சுரல் அகாடமியில உலக நாவல பத்தி நம்ப பண்டிதர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு வாரம் உபன்யாசம் பேசுனப்போ சாநி அங்கன போனாராம். அதுல ஒருத்தரு குர்தா போட்டுக்கிணு வர, மாமா சாநி ஏனுன்னு கேக்கப் போய், இதுதான் இலக்கியத்துக்கு டிரஸ் கோடுன்னு சொல்ல, சாநிக்கு தூக்கம் வரலயாம். அப்பத்தான் விட்டலச்சார்யா கம்பெனி ஆர்ட்டிஸ்டு காந்தாராவ் கணக்கா ஒரு சங்கல்பம் போட்டு, எக்சைலை ரிலீசு பண்றப்போ கோட்டு சூட்டு போடுவேன்னு மங்கம்மா சபதம் போட்டாராம்.
இதுக்கு மிஷல் ஃபூக்கவ கூப்பிட்டு அவரோட Discipline and Punishment புக்குல டிரெஸ்ங்குறது எப்புடி அதிகாரத்தோட குறியூடு, யூனிஃபார்ம பாத்தா மக்களுக்கு எப்படி கதி கலங்குதுன்னு பல் விளக்குண மாறி விளக்கிட்டு, அவருதான் இந்த யூனிஃபார்மிட்டிய ஒடைக்க வந்த அம்புலிமாமான்னு ஆர்ப்பாட்டம் பண்ணுனாறு. அடிங், யூனிஃபார்மிட்டியை உடைக்கணும்மான கோவணத்த கட்டிக்கிணு வா, இல்லை ஜாக்கி ஜட்டியோட வா, அத வுட்டு கோட்டு சூட்டு போட்டா அது கலகமா இல்லை பிரிஞ்சால் காயா? பேண்டு சட்டை போட்டுகிணு வர கெவர்மண்டு ஆபிசருமாரை பாத்தா கன்னத்துல போட்டுகிணு சாமிண்ணு கும்பிடுற நாட்டுல கோட்டு சூட்டு போட்டா நம்ம மக்கமாறு காலுலேயே வுழுவான். அந்த படிக்கு அந்த டிரெஸ் மேலே இந்த ஊருக்கு அவ்வ்வளு டெரரு இருக்குணு இந்த கஸ்மாலத்துக்கு தெரியாத இன்னா?
இப்புடி சாநி குர்தாவ கிழிச்ச போது பத்திரிகையாளர் ஞாநி குர்தா இல்லேனா ஜிப்பாவோடு செல்போன்ல பாம்பு கேமை ஆடிக்கிட்டிருந்தது அவருட பின்னாடி இருந்து எட்டிப்பாத்த எனக்கு தெரிஞ்சுது. இது என்னன்னா, கூட்டம்னா அதை கம்னு கேட்கணும்ணு இருந்த யூனிஃபார்மிட்டிய ஞாநி கலாய்ச்சு கலகம் பண்ணுராருன்னு எடுத்துக்கலாம்.
பெறவு சாநியோட இந்த புக்கை ஒரு பய 50,000யிரத்துக்கும், இரண்டுபய 25,000த்துக்கும், சிலரு 5, 10 ஆயிரத்துக்கும்னு எடுத்தானுகளாம். அதுல அவனுக யாரும் பேரை சொல்லக்கூடாதுன்னு கண்டிசனா போட்டுட்டுனாகளாம். பெறவு சாட் மேட்டர் போலீசுக்கு போனா, ஸ்பான்சரு ஆருன்னு என்கொயரி வருமே? இது ஏலமா, இல்லை வசூலான்னு உங்களுக்கு தோணுணாலும், அதெல்லாம் தேவமாரு இரகசியம்டே, உள்குத்து என்னண்ணு எவனுக்கு தெரியும்?
பெறவு ஒரு இருபது பேரைக்கூப்பிட்டு சாநி ஜால்ரா போட்டுக்கிணு புக் கொடுத்தாரு. அதுல சீனிவாசன்ங்கிறவரை ஃபிரெண்டு, பிலாசபரு, கைடு ன்னு தூக்கி வுட்டாரு. இந்த கைடுதான் சாநிக்காக பிச்சாவரத்துல மப்போட மான்கறி போட்ட மகான்னு சொல்லுதாக. உண்மையான்னு எங்கிட்ட கேக்காதீக. ஆனா இது போலீசுக்கு போயிரும்னு பயந்து சாநி அந்த பார்ட்டி போஸ்ட்டுகளை தூக்குனது தனிக்கதை. அப்பாலிக்கா வந்த டாக்டர் ரமேஷ், இவரு பங்காரு அடிகளோட கனைக்ஷன் உள்ளவரு. நித்யானந்தா மேட்டருல சந்தி சிரிச்சாலும், சாநியோட ஆஸ்ரம கனக்சனுங்க இன்னும் முடியல. அடுத்து சங்கர மடத்து மேனேஜர் மஹாதேவன் ஐயர் 2012ல வந்தாலும் வரலாம். ஆரு கண்டா?
விவேக் நாராயணன்னு ஒரு அமெரிக்க அம்பி, அதுவும் தமிழ் தெரியாத அம்பியைக் கூப்பிட்டு மத்த தமிழ் பயலுவுகளுக்கு இரண்டு செகண்டுல முடிச்ச சாநி இவரை மட்டும் கூரையில் வைச்சு கொண்டாடுன கணக்கா ஆர்டிக் ஐஸ் பொழிஞ்சாரு. அதுமேறி இங்கிலாந்து எம்பசியிலிருந்து ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் வந்தாரு. என்ன இருந்தாலும் ரஸ்ஸலுக்கே விலை வைச்சு கம்யூனிச எதிர்ப்புல கல்லா கட்டுன நாட்டுக்காரனுக்கு இந்த சாநியை ஆட விட ஒரு பீரு போதுன்னு தெரியாதா?
சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழாஇது போக அதிமுக பெரும்புள்ளிங்க, அந்துமணி ரமேஷின் தம்பி புதுச்சேரி தினமலர் வெங்கடேஷ்ன்னு ரூலிங் கிளாசின் அல்லா தூண்களும் வந்தானுங்க. அந்துமணி ரமேஷ் மட்டும் ரொம்ப பவ்யமா ஒரு ஓரத்துல இந்தப்பூனையும் பால் குயிக்குமாங்குற கணக்கால குந்தியிருந்தாரு. இவருதான் மேல்மட்டத்து கிசுகிசு கதங்களை பைவ்ஸ்டார் ஓட்டல் பார்ட்டியில சாநிக்கு கொடுக்குற சோர்ஸ். பெறவு அந்த சோர்ஸ் மெட்டீரியலை வைத்து சாநி ஏதாவது எழுதி மண்டபத்துல இருக்குற அந்துமணிக்கு டைம் பாஸ் கொடுப்பாரு. அந்தக் காலத்துல இருந்து மன்னர்மாரு இப்புடி மண்டபத்துல இருக்குற பரதேசி புலவனுங்களெயெல்லாம் தூக்கிப்போட்டு கொண்டு வந்து பால் பாயாசத்தோட சாப்பாடு போட்டு ஜால்ரா பாட்டு  கேடு ரசிப்பானுக. இங்க பாயாசத்துக்கு பதில் ஷேம்பைன், அம்புட்டுதான் வித்தியாசம். ஆனா சாநிக்கு வாழ்நாள் சந்தா கட்டுன நல்லி குப்புசாமியும் அவரோட நிழலான தூர்தர்ஷன் நடராஜனும் மிஸ்ஸிங். ஒருவேளை அவுகதான் பிகைண்ட த ஸ்பான்சரோ என்ன எழவோ.

மேடையில பேசுன பெருசுங்க, கூட்டத்த பாத்து ஆயிரம், 700ன்னு கணக்கு சொன்னதுங்க. பாக்கிறது எல்லாம் ரெண்டா தெரிஞ்சா அதுக்கு என்ன காரணமுன்னு அல்லா பயலுகளுக்கு தெரிஞ்சிருக்கும். எதுக்கு வம்புனு கூட்டம் ஆரம்பிக்கையில இருந்து முடியற வரைக்கும் மூணு தபா அம்புட்டு தலைங்களயும் எண்ணிப் பாத்தேன். மேடையில இருந்தவுங்களுயும் சேத்து 340க்கு மேல மீட்டர் போகல. அடப்பாவிங்களா இதுக்கா இத்தனை பில்டப்பு! தினமலருல வெளம்பரம், பத்ரியோட புரொமோ, யூடியூபுல புரமோ, சாநி தளத்துல தொடர்ந்து கீறல் ரிக்கார்டு டயலாக், கெழக்கு கம்பெனியின்  வெளம்பரம்… இத வுட தி.மு.க மீட்டிங்குல குமரி முத்துவுக்கு ஆயிரக்கணக்குல கூட்டம் சேருமேடே? அங்கன போனா உருப்படியா நாலு கருத்தையும், காமடியையும் கேட்டுகிணு ராத்திரி அம்சமா உறங்கலாமடே?
கூட்டத்துக்கு வந்த பெரபலங்கள சாநி கூவிக் கூவி வித்துக்கிணு இருந்ததைப் பாத்தா அவுகளுக்கே வெக்கத்துல அட்டாக்கே வந்திருக்கும். ஆடுகளம் இயக்குநர் வெற்றி மாறன், ஞாநி, மதனுன்னு டி.வி சீரியல் ஹமாம் சோப்பு விளம்பரம் போல பீத்துனது போதாதுன்னு அதுக்கு அல்லக்கைங்க கைதட்டுனத பாத்தா தமிழ்நாடு எம்புட்டு பெரபல மோஸ்தர் வறட்சியில இருக்குதுன்ணு தெரியுது. இவனுகதான் செக்ஸ் வறட்சியப் பத்தி பேசுதானுக!
மதனோட ஏற்கனவே பேசி வச்சமாறி அவர பேசக் கூப்பிட்டாரு சாநி. மதனும் ஏதோ பெரிய அறிவாளி மாதிரி இந்த நாவலு இன்டர்நேஷனல் தரம்னு அடிச்சிவுட்டு அதுக்கு ஆதாரமா அவரும் இ.நேஷனல் ரீடருன்னு சொன்னாரு. என்சைக்ளோப்பீடியாவையும் விக்கிபீடியாவையும் மேயுறவனெல்லாம் இ.நே ரீடருன்னா நம்ப நமீதாவையும் அறிவாளியா ஒத்துக்கலாம். அடுத்து இவரு சாநியை ஒளிவு மறைவு இல்லாம எழுதுற கலகக்காறனா பலூன் ஊதுற மேறி உப்ப வைச்சாரு. ஆ.விகடன்ல ஆரையும் பகைச்சுக்காம, சூடு, சொரணை, காரம், கசப்பு இல்லாம மொக்கை காட்டூன் போடுற ஒரு பயந்தாங்கோளி சாநியை தைரியசாலின்னு உச்சிமோருத பாத்தா, நம்ம ஊருல கோழைக எவனுமே கிடையாதுடே.
இதுல இந்த சூராதி சூரன் சாநியோட எக்சைல் நாவல யூலா போகாம வாசிச்சாராம். சாநியும் இந்த புக்க செய்ஞ்ச போது அதாம்டே எழுதுன போது பலநாளு மூச்சா போலயாம்.  ஜெயமோகனும் இப்புடித்தான் மூச்சா போகாம எழுதுனாத பலவாட்டி எழுதிக்கிறாரு. இப்புடி மூச்சா புராணத்தை சாநியும், மதனும் விலாவாரியா விளக்குண கேப்புலயும், பெறவும் நானே ரெண்டு முறை மூச்சா போனேன். இவனுக பேச்சைக் கேட்டு அடிவயிறு கலங்கி பீச்சாம இருந்த வரைக்கும் சர்தான்.
பெரிசு இ.பா பேசுற போது ஒருஉண்மைய ஒத்துக்கிட்டாரு. இந்த நாவலு மைல்டு ஃபோர்னா இல்ல ஓய், இது ஹார்டு ஃபோர்னோன்னு வழிஞ்சாரு, என்ன இருந்தாலும் அவரும் தன்னை யூத்துனு காமிச்சிக்கிணும்லா? அதுலயும் ஒரு வேவ் லென்த் இருக்கு. வெண்மணி கொலையை வைச்சு குருதிப்புனல்னு நாவல் எழுதுன இந்த இ.பா. அதுல கோபாலகிருஷ்ண நாயுடு அந்த கொலையை செஞ்சதுக்கு காரணம் அவனோட செக்ஸ் வறட்ச்சின்னு ஒரு கண்டுபிடிப்பை போட்டாரு. நாமளும் இது தெரியாம அமெரிக்காகாரன் ஈராக்கை ஆக்கிரமிச்சதுக்கு ஏதோ ஏகாதிபத்தியம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு கிடக்கோம். சாநியும் அவரது சொந்த வாழ்க்கையில செக்ஸ் வறட்சி உள்ளவருங்கிறதுனாலே இந்த உலகமே காமத்துல காய்ஞ்சி போனதா கண்டுபிடிச்சிருக்காரு. இரண்டு பேரும் மேச்சுதானடே?
சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா
அடுத்து சமைஞ்சது எப்புடின்னு பாட்டு எழுதுன வாலி பேசுறப்போ, ஆறு மாதத்துக்கு முந்தி சாநிய தெரியாதுன்னு சொல்லிட்டு, அடுத்த வரியிலேய்யே அவரு எழுத்த எதையும் படிச்சதில்லேன்னுட்டு, பெறவு அகஸ்மாத்தா ஒன்னு ரெண்டு படிச்சேன்னு சொல்லி இவரும் சாநியை கலககாரன்னு தூக்குனாரு. சாநி வாலியை பத்தி ரீலுறப்போ வாலி எப்போதும் சமரசம் செய்ஞ்சதில்லேன்னு அடிச்சு வுட்டாரு. கேக்குறவன் கேனயன்னு நெனைப்பா, தெரியல. கருணாநிதி ஜால்ரா கவியரங்குத்துல இந்த வாலி போட்ட ஆட்டமென்ன, பெறவு ஜெயா மாமி வந்தப்புறம் அவரை ரெங்கநாயகின்னு தொழுததென்ன, மண்டபத்துல இருந்த ஒரு பயலும் நியூஸ் பேப்பர் கூட படிக்கிறதில்லேன்னு தெரியுது.

கடைசியா சாநி பேசுனது எல்லாம் புதுசு இல்லை. எழுத்தாளன தமிழகம் வாழ வைக்கல, சித்த மருத்தவத்தின் பலன், சபரிமலையின் புனித அனுவபம், கிராமத்து உணவு, பாரத மரபுன்னு காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை உள்ள அத்தனை சமாச்சாரத்தையும் கலந்து காக்டெயில்ல அடிச்சு பேசுராறு. அதுல ஒரு உண்மையை பாத்தீகன்னா அல்லாம் அவரு சொந்தப் பிரச்சினையில இருந்து குன்சாவாக கத்துகிட்ட தீர்வுங்கள வைச்சு அல்லாருக்கும் அட்வைசு மழைய பொழிதாரு. ஊர் பிரச்சினையை பாக்க கூட வக்கில்லாதவன் சொந்த பிரச்சினைய எலக்கியமாக்கப் போறேன்னு ஆரம்பிச்சா அது ஆண்மைக்குறைவயும், கைமுட்டியயையும் தாண்டுமாடே?
பர்கர், பிசா, கே.எப்.சி, ஐஸ் காஃபின்னு காசு உள்ள யூத் போற நாட்டுல சுக்குமிளகுதிப்பிலின்னு கஷாய கிளாசு எடுக்கிறவரு எப்படிடே யூத்தா இருப்பாரு? சாநியோட செக்ஸ் கதங்களுக்காகவும், கிசுசிசு மேட்டருக்காவும் படிக்க வரவன்கிட்ட சாமியே ஐயப்பான்னு முழங்கச் சொல்லுறவரை எவன்டே மதிப்பான்? ஆனா பாத்துக்கிடுங்க பட்டையும், கொட்டையுமா பக்திப் பழமா இருக்கிறவன்தான் பொறுக்கியாவும் இருப்பான்ங்குறது நமக்கு தெரிஞ்ச விசயம்.
இதுல இவரு பப்பு தமிழுல வேகலேங்குறதால இனி இங்கிலீசுல நாவல் எழுதி அடுத்த வருசம் வெளியிடப் போராறாம். இங்கிலிசுல இந்த பொறுக்கி சமாச்சாரங்கள்ளாம் டிரிபிள் எக்ஸ் மேட்டரா இலவசமா கிடைக்கிற நேரத்துல இவரு என்னத்த எழுதி என்னத்த கிழிக்க? வேத மரபை ஏத்துக்கிற தயானந்த சரஸ்வதி, சித்த மரபையும் ஏத்துக்கிடணும்னு இந்த சாநி பேசுற போது எவனுக்காவது உரைச்சுச்சா? வேத மரபை மறுத்து வந்ததுதான் சித்த மரபு, அது பாப்பனிய எதிர் மரபுன்னுகூட இந்த லூசு மாமாவுக்கு தெரியல இதுல மத்தவனெல்லாம் எதையும் படிக்கிறதில்லேன்னு இவரு வருத்தப்பட்டதை என்னன்னு சொல்ல? ஒன் யோக்கியதையை கண்ணாடியில பாருயா வெண்ணை!
காரல் மார்க்ஸ் இந்தியருங்களை காட்டுமிராண்டின்னு சொன்னதா சாநி அடிச்சு வுட்டதைப்பாத்தா இவனெல்லாம் புஷ்பா தங்கதொரையைத்தாண்டி எதையும் படிச்சவனில்லைன்றது தெரியுது.
இதுல இவருக்கும் ஜெயமோகனுக்கும் நடக்குற குழாயடிச் சண்டையை ஏதோ மாபெரும் தத்துவ சண்டைன்னு சொன்னதைக் கேட்டு ஜெயமோகன் அவரோட பார்வதிபுரத்து வூட்டு சுவத்துல முட்டி முட்டி அழுவுறாராம். அவரை தேத்துறதுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்காரனுவ நாகர்கோவிலுக்கு பஸ் ஏறியிருக்கானுகன்னு ஊர் பூரா பேச்சு.
சாநியோட வூட்டுக்காரம்மா வாலி, இ.பா காலுல வுழுந்து கும்பிட்டதும்தான் ஒரு உண்மை தெரிஞ்சிது. அந்த அம்மா, வாலி, இ.பா, மதன், பத்ரி அல்லாரும் அவாளுங்குற சேதியப் பாத்தா என்ன தோணுது? அய்யங்காரு ஆத்துல ஐயரைக்கூட்டி பூணூல் கல்யாணத்துக்கு விருந்து வெச்சா மேறி ஒரு எஃபக்ட்டு.
ஏலேய் போக்கத்த மூதிகளா இதுக்கு மேலயும் இந்த எக்சைலு புக்க வாங்கி காசை விரயமாக்காதிகடே! அந்தக் காசுல பாய் கடையில பத்து பிளேட் பீஃப் வாங்கித் துன்னா ஆண்மைக்குறைவும் வராது, ஆய் குறைவும் வராதுடே! இப்ப சில பதிவருமாரு அந்த புக்குல இருக்குற சமாச்சாரத்தை காப்பி பண்ணி போட்டிருக்காக. அதுல பாத்தா, பத்து பக்கத்துக்கு ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியம், பத்து பக்கத்துக்கு ஐயப்பா சரணம், பத்து பக்கத்துக்கு பாட்டி வைத்தியம், மீதிப்பக்க்த்துக்கு செக்ஸ் மேட்டருன்னு இருக்குறத நம்ப அண்ணாச்சி உண்மைத்தமிழன் தொட்டு சுரேஷ் கண்ணன் வரைக்கும் காறித் துப்புதாக. மீறி வாங்கின்னா அதுக்கு எச்சில் இலையை பொறுக்கி துன்னலாம்.
இதுல சாநியோட புக்கை ஆயிரக்கணக்குல வித்துரலாம்னு தப்புக்கணக்கு போட்டு அம்புட்டையும் மண்டபத்துல இறக்கி, அதுல நூறு வித்தா அதிகம், மிச்சத்தை அள்ளிக்கட்டி கிழக்கு பாய்சை துன்புறுத்திய பத்ரி, வசந்த மாளிகை சிவாஜிகணேசன் துக்கத்துல சிரிச்சது பாக்க சகிக்கலன்னாலும் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. இதுல ஜெயமோகனோட ரைட் ஹேண்ட் ஹரன் பிரசன்னாவுக்கு சாநி தனியா தாங்ஸ் சொன்னத நாம குறிச்சு வச்சக்கணும்டே!
ஜெயமோகனோட விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு வாடகைக்கு எடுத்துக்கிணு, சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
ஒரு பச்ச புள்ளைக்கு ஆபாசமா சாட் அனுப்பி ஆசைக்கு வக்கிரமா வற்புறுத்திய ஒரு பொறுக்கி ஒரு நாவல் எழுதுவானாம். அதை ஒருத்தன் புக்கா போடுவானாம். அதுக்கு விழாவாம். அதுல சில விஜபி வருவானுங்களாம். வந்தவனுங்க அந்த பொறுக்கிய தைரியசாலின்னு பாராட்டுவானுகளாம். அதுக்கு வூட்டம்மாவை வூட்டுல வுட்டுட்டு வந்தவனுங்க கைதட்டுவானுகளாம். வெளங்குமாடே இந்த நாடு?
_____________________________________
- காளமேகம் அண்ணாச்சி

கருத்துகள் இல்லை: