செவ்வாய், 9 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்திலும் ஜல் சூறாவளியின் தாக்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரையில் நேற்றைய தினம் கடல் பெருக்கெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாகர்கோவில் மருதங்கேணி வீதியில் வெள்ளம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்த ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்றைய தினம் யாழ்ப்பாண குடாநாட்டில் மீன்பிடிக்கு தயாரான மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை.
நேற்றைய தினமும் நேற்று முன்னதினமும் கடற்றொழிலுக்கு செல்லாத நிலையில் அவர்களின் வருமானம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை வடமராட்சி மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் என்பன சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: