சனி, 13 நவம்பர், 2010

சூதாட்டத்துக்கு சட்ட அங்கீகாரம்:சட்டத்தை மீறினால் 5 வருடச் சிறை ரூபா 50 இலட்சம் அபராதம்!

சட்ட நியதிகளுக்கு முரணாக சூதாட்டத் தொழிலை மேற்கொள்பவருக்கு 5 வருட சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்படும். சிலவேளைகளில் இரு தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டிவருமென சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது2012 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்தும் அதன் பின்னரும் அமைச்சரால் அதன் பொருட்டு வழங்கப்படும் செல்லுபடியான உரிமமொன்றின் அதிகாரத்தின் கீழின்றியும் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளையினால் குறித்தொதுக்கப்பட்ட ஓர் இடப்பரப்புக் குள்ளின்றியும் சூதாட்டத் தொழிலில் ஈடுபட முடியாது.
எந்த அமைச்சருக்கு சூதாட்டம் என்னும் விடயம் குறித்தொதுக்கப்பட்டுள்ளதோ அந்த அமைச்சரின் அமைச்சு செயலாளர்,சூதாட்டத் தொழிலை கொண்டு நடத்துவதற்கான உரிமங்களைப் பெறுவதற்கான தெளிவுப்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவித்தல்களை வழங்குவதற்காக சிங்கள,தமிழ்,ஆங்கில மொழி தினசரிகளில் அறிவித்தல் வெளியிடவேண்டும்.சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக சூதாட்டத்தொழிலை கொண்டு நடத்தும் ஆளெவரும் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் பேரில் 5 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதொரு காலப் பகுதிக்குள் இரு வகையிலொருவகை மறியல் தண்டனைக்கு அல்லது 5 மில்லியன் ரூபா குற்றப் பணமென்றுக்கு அல்லது அத்தகைய மறியல் தண்டனை,குற்றப்பணம் ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும்.
நியதிகளின் படி வழங்கப்பட்ட உரிமம் அதன்படி குறித்துரைக்கப்பட வேண்டிய அத்தகைய நியதி நிபந்தனைகளுக்கு அமைந்தாதல் வேண்டும். அமைச்சர் இச் சட்டத்தின் கோட்பாடுகளையும், ஏற்பாடுகளையும் நிறைவேற்றும் அல்லது அவற்றிற்கு பயனளிக்கும் நோக்கத்திற்கு ஒழுங்கு விதிகளை ஆக்கலாம்.எந்த விடயம் தொடர்பில் ஒழுங்கு விதிகள் ஆக்கப்பட வேண்டுமென இச் சட்டத்தால் அதிகாரமளிக்கப்படுகின்றதோ அல்லது தேவைப்படுத்தப்படுகின்றதோ அந்த ஏதேனும் விடயம்,உரிமம் ஒன்றிற்கான விண்ணப்பப்படிவமும் அதற்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களும்,அத்துடன் அவ்வாறு வழங்கப்பட்ட உரிமமொன்று சூதாட்ட விடுதிகளால் கொண்டு நடத்தப்படும் வெவ்வேறு செயற்பாடுகள் தொடர்பில் எந்தக் காலப்பகுதிக்கும் செல்லுபடியாகுமோ அந்தக் காலப்பகுதி அத்துடன் எவையேனும் தோதான வழிமுறைகள், உரிமங்கள் வழங்குவதில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கை முறைகள்,உரிமங்களை இல்லாதொளிப்பதற்கான நடவடிக்கை முறை போன்றவற்றில் அமைச்சர் ஒழுங்கு விதிகளை கொண்டுவர முடியும்.அமைச்சரால் கொண்டுவரப்படும் ஒழுங்கு விதிகள் ஒவ்வொன்றும் வர்த்தமானியில் வெளியிடப்படவேண்டும். அமைச்சரால் கொண்டுவரப்பட்ட பின்னர் விரைவாக அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும்.
கசினோ நகரமாக கொழும்பு மாறும்; ஐ.தே.க. எச்சரிக்கை
அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகற்றி கொழும்பை கசினோ நகரமாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யான ஜோசப் மைக்கல் பெரேரா குற்றஞ்சாட்டினார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சூதாட்டம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஜோசப் மைக்கல் பெரேரா இந்தக் கருத்தை வெளியிட்டார்.அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகற்றி கொழும்பை கசினோ நகரமாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யான ஜோசப் மைக்கல் பெரேரா குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சூதாட்டம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஜோசப் மைக்கல் பெரேரா இந்தக் கருத்தை வெளியிட்டார்.அவர் இங்கு மேலும் பேசுகையில் இதன் மூலம் கசினோவும் சூதாட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்திற்குத் தேவையானவர்களுக்கு கசினோ நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என மூடிமறைத்து பேசுகிறார்கள்.இங்கு சட்டவிரோதமானது சட்ட நீதியாக்கப்படுகிறது. இதுவே செய்யப்படுகிறது. பொருளாதார அபிவிருத்திக்கென சுற்றுலாத்துறையில் பணம் சம்பாதிக்க அரசு செயற்படுகிறது. சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்து குப்பைகளையும் நாட்டிற்குள் கொண்டுவரக்கூடாது.
சட்டவிரோதமானவையாக இருப்பவற்றை ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரவே அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு சென்றால் விபசாரத்தையும் அந்த ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருவீர்கள். விபசாரத்தில் ஈடுபட்டமைக்காக வெளிநாட்டுப் பெண்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்த அரசு தயாராகவிருக்கிறது.இந்த வழியில் கொழும்பு ஹோட்டல்களிலுள்ள விபசாரகூடங்களையும் அரசாங்கம் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரக்கூடும்.அப்படியென்றால் கிராமப்புறங்களில் சீட்டாட்டம் ஆடுபவர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆகவே, இந்தச் சீட்டாட்டத்தையும் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவர முடியுமே.
கசினோ மட்டுமல்ல, பல விடயங்களும் இதன் கீழ் இருக்கின்றன. சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கும் இந்தச் சட்டமூலத்துக்கு கர்தினாலாக நியமனம் பெற்றுள்ள கொழும்பு பேராயர் அதி வண மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கவலையை வெளியிட்டு எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார். கற்றறிந்த பாடங்கள்,நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இதைத் தெரிவித்திருந்தார்.அத்துடன், பௌத்த மதத் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.சட்டவிரோத நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் கொடுப்பதையே இங்கு செய்கிறீர்கள். இதற்காகவே இந்தச் சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டு வந்துள்ளீர்கள். முழு உலகிலுமுள்ள மோசடிகளை ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரவே அரசாங்கம் செயற்படுகிறது.
கொழும்பிலுள்ள அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களில் இருந்து அகற்றி புதிய நகரமொன்றை உருவாக்குவதாக கொழும்பை கசினோ நகரமாக்கும் மறைமுகமான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.அவர் இங்கு மேலும் பேசுகையில்இதன் மூலம் கசினோவும் சூதாட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்திற்குத் தேவையானவர்களுக்கு கசினோ நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி என மூடிமறைத்து பேசுகிறார்கள்.
இங்கு சட்டவிரோதமானது சட்ட நீதியாக்கப்படுகிறது. இதுவே செய்யப்படுகிறது. பொருளாதார அபிவிருத்திக்கென சுற்றுலாத்துறையில் பணம் சம்பாதிக்க அரசு செயற்படுகிறது. சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்து குப்பைகளையும் நாட்டிற்குள் கொண்டுவரக்கூடாது.சட்டவிரோதமானவையாக இருப்பவற்றை ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரவே அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு சென்றால் விபசாரத்தையும் அந்த ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருவீர்கள். விபசாரத்தில் ஈடுபட்டமைக்காக வெளிநாட்டுப் பெண்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக உலகிலுள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்த அரசு தயாராகவிருக்கிறது.
இந்த வழியில் கொழும்பு ஹோட்டல்களிலுள்ள விபசாரகூடங்களையும் அரசாங்கம் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரக்கூடும்.அப்படியென்றால் கிராமப்புறங்களில் சீட்டாட்டம் ஆடுபவர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆகவே, இந்தச் சீட்டாட்டத்தையும் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவர முடியுமே.கசினோ மட்டுமல்ல, பல விடயங்களும் இதன் கீழ் இருக்கின்றன. சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கும் இந்தச் சட்டமூலத்துக்கு கர்தினாலாக நியமனம் பெற்றுள்ள கொழும்பு பேராயர் அதி வண மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கவலையை வெளியிட்டு எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார். கற்றறிந்த பாடங்கள்,நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இதைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், பௌத்த மதத் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் கொடுப்பதையே இங்கு செய்கிறீர்கள். இதற்காகவே இந்தச் சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டு வந்துள்ளீர்கள். முழு உலகிலுமுள்ள மோசடிகளை ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரவே அரசாங்கம் செயற்படுகிறது.கொழும்பிலுள்ள அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடங்களில் இருந்து அகற்றி புதிய நகரமொன்றை உருவாக்குவதாக கொழும்பை கசினோ நகரமாக்கும் மறைமுகமான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை: